பயணியிடம் இருந்து 2.7 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

294

டெல்லி பஞ்சாபி பாக் மேற்கு மெட்ரோ ரயில் நிலையத்தில், சந்தேகத்திற்கு இடமாக இருந்த ரயில் பயணியிடம், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.

அப்போது அவரிடம் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து, இந்திய மதிப்பில் 2.7 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணைக்கு பிறகு அவரை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம், ஒப்படைத்துள்ளனர்.