தண்ணீர் பிடித்துவராத மகனை அடித்துக்கொன்ற தந்தை

165

மராட்டிய மாநிலத்தில் உள்ள சுரதேவி கிராமத்தை சேர்ந்த சாந்த்லால் என்பவர், மது அருந்திய நிலையில், தனது மகனிடம் வீட்டிற்கு தண்ணீர் பிடித்துவரச்சொல்லி கூறியுள்ளார்.

ஆனால், இதற்கு அந்த 10 வயது சிறுவன் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அவர், தனது மகன் என்றும் பாராமல் சரமாரியாக அடித்துள்ளார்.

இதில் காயமடைந்த அவரது மகன், பேச்சு, மூச்சின்றி அசைவற்று கிடந்துள்ளான்.

இதை கண்ட சிறுவனின் உறவினர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்துவிட்டதாக கூறினர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்தியதில், குற்றம் சாட்டப்பட்டவர், மது அருந்தும் பழக்கம் உடையவர் என்று, அற்ப விஷயங்களுக்கு மகனைத் தாக்கும் பழக்கத்தை வாடிக்கையாக கொண்டவர் என்பது தெரியவந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் பெல்ட்டால் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர், குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், கொலைக்காக கைது செய்யப்பட்டதாகவும் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.