குறைத்து வரும் கொரோனா கொடிய நோய்

245

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து 5 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று 5 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் புதிதாக 4 ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிகை 4 கோடியே 45 லட்சத்து 63 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 719 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 90 ஆயிரத்து 414 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு புதிதாக 38 பேர் உயிரிழந்ததால், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 487 ஆக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் சிசிக்சையில் இருப்போரின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 436 ஆக குறைந்துள்ளது.