தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து

205

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து, 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

இந்தியாவில் நேற்று ஆயிரத்து 957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகரித்துள்ளது. அதன்படி நாடுமுழுவதும் புதிதாக 2 ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிகை 4 கோடியே 46 லட்சத்து 18 ஆயிரத்து 533 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 3 ஆயிரத்து 208 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 63 ஆயிரத்து 406 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு புதிதாக 13 பேர்  உயிரிழந்ததால், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது.  நாடுமுழுவதும் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 292 ஆக குறைந்துள்ளது.