2வது நாளாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர்

272

தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை, சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று முதல் நாளாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் 2-வது நாளாக இன்றும், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, செயல்பாடு, தாமதத்திற்கான காரணம் பற்றி துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்து பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த செயலாளர்கள் கலந்து கொண்டனர்.