<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>World News - Sathiyam TV</title>
	<atom:link href="https://sathiyam.tv/category/world-news/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://sathiyam.tv/category/world-news/</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 03 Aug 2026 08:20:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://sathiyam.tv/wp-content/uploads/2024/11/cropped-cropped-Sathiyam-New-Logo-300x300-1-32x32.jpg</url>
	<title>World News - Sathiyam TV</title>
	<link>https://sathiyam.tv/category/world-news/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஈரான் வைத்த அடுத்த &#8216;ஆப்பு&#8217;! டிரம்ப்பை சுத்தி சுத்தி அடிக்கும் நட்பு நாடுகள்!</title>
		<link>https://sathiyam.tv/the-latest-blow-dealt-by-iran-even-allied-nations-are-relentlessly-targeting-trump/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 09:30:00 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658602</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கு அரசியல் என்பது, எப்போதுமே ஒரு சிக்கலான சதுரங்க ஆட்டம். இதில், யார் நண்பன், யார் எதிரி என்பது நிமிடத்திற்கு நிமிடம் மாறும். தற்போது, அந்த ஆட்டத்தில் ஒரு புதிய, எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை, முதன்முறையாக அமெரிக்காவின் போர்த் திட்டங்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளன. ஈரான் மீது ஒரு பெரும் தாக்குதலை நடத்த அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டபோது, அதைத் தடுத்து [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/the-latest-blow-dealt-by-iran-even-allied-nations-are-relentlessly-targeting-trump/">ஈரான் வைத்த அடுத்த &#8216;ஆப்பு&#8217;! டிரம்ப்பை சுத்தி சுத்தி அடிக்கும் நட்பு நாடுகள்!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">மத்திய கிழக்கு அரசியல் என்பது, எப்போதுமே ஒரு சிக்கலான சதுரங்க ஆட்டம். இதில், யார் நண்பன், யார் எதிரி என்பது நிமிடத்திற்கு நிமிடம் மாறும். தற்போது, அந்த ஆட்டத்தில் ஒரு புதிய, எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை, முதன்முறையாக அமெரிக்காவின் போர்த் திட்டங்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">ஈரான் மீது ஒரு பெரும் தாக்குதலை நடத்த அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்தியதே சவுதி இளவரசர்தான். ஈரானுடன் போரிட்டால், தங்களது எண்ணெய் வயல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்ற அச்சமே, சவுதியை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது. மேலும், அமெரிக்காவிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க, கூடுதல் வான் பாதுகாப்பு ஏவுகணைகளையும், முழுமையான பாதுகாப்பு உத்திரவாதத்தையும் வளைகுடா நாடுகள் கோரியுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">ஆனால், இதில் ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு உள்ளது. ஈரானை எப்படி எதிர்கொள்வது என்பதில், இந்த நட்பு நாடுகளுக்குள்ளேயே இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.</p>



<p class="wp-block-paragraph">சவுதி அரேபியா, போரைத் தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.ஆனால், ஐக்கிய அரபு அமீரகமோ, ஈரான் மீது கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும் விரும்புகிறது.</p>



<p class="wp-block-paragraph">இந்த இரு வேறுபட்ட கோரிக்கைகள்தான், அமெரிக்க அதிபர் ட்ரம்பை ஒரு தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருபுறம், போரைத் தொடர்ந்தால், பெட்ரோல் விலை உயர்ந்து, வரவிருக்கும் தேர்தலில் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்ற உள்நாட்டு அழுத்தம். மறுபுறம், தனது நட்பு நாடுகளையே திருப்திப்படுத்த முடியாத ஒரு ராஜதந்திரச் சிக்கல்.</p>



<p class="wp-block-paragraph">இந்தக் குழப்பமான சூழலை, ஈரான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க, ஒரு சமரசத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்வது போலத் தெரிந்தாலும், அதைப் பயன்படுத்தும் கப்பல்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்து, அமெரிக்காவிற்கு ஒரு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ஆக, அமெரிக்கா &#8211; ஈரான் போரில், தற்போது அமெரிக்காவின் நட்பு நாடுகளே, ஒரு முக்கிய சக்தியாக மாறியுள்ளன. அவர்களின் ஆதரவு இல்லாமல், அமெரிக்காவால் இந்தப் போரைத் தொடர முடியாது. எனவே, தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் எந்த ஒரு முடிவிற்கும் மட்டுமே துணை நிற்போம் என்று, வளைகுடா நாடுகள் அமெரிக்காவிற்குத் தெளிவாக உணர்த்தியுள்ளன. இந்த ராஜதந்திர சதுரங்கத்தில், ட்ரம்பின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/the-latest-blow-dealt-by-iran-even-allied-nations-are-relentlessly-targeting-trump/">ஈரான் வைத்த அடுத்த &#8216;ஆப்பு&#8217;! டிரம்ப்பை சுத்தி சுத்தி அடிக்கும் நட்பு நாடுகள்!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இஸ்ரேல் செய்த &#8216;சம்பவம்&#8217;! நெதன்யாகுவை கிழித்தெறிந்த &#8216;துருக்கி&#8217;!</title>
		<link>https://sathiyam.tv/the-move-by-israel-turkey-tears-into-netanyahu/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 09:00:00 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658599</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணியாத நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதல்களில் ஒரே நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பின்னணியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செயல்பாடுகளைத் துருக்கி நாடு மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது. நெதன்யாகுவின் &#8220;விரிவாக்கவாத கொள்கை&#8221; (Expansionist Approach) ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/the-move-by-israel-turkey-tears-into-netanyahu/">இஸ்ரேல் செய்த &#8216;சம்பவம்&#8217;! நெதன்யாகுவை கிழித்தெறிந்த &#8216;துருக்கி&#8217;!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணியாத நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதல்களில் ஒரே நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்தப் பின்னணியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செயல்பாடுகளைத் துருக்கி நாடு மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது. நெதன்யாகுவின் &#8220;விரிவாக்கவாத கொள்கை&#8221; (Expansionist Approach) ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஒரு மிகப்பெரிய போர்க்களமாக மாற்ற முயற்சிப்பதாகத் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">பாலஸ்தீனியர்களைத் தங்களது சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றுவதும், பிராந்தியத்தில் நிலவும் தற்காலிக அமைதியைச் சீர்குலைப்பதுமே நெதன்யாகுவின் ஒரே நோக்கம் எனத் துருக்கி பகிரங்கமாக அறிவித்துள்ளது. அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், காசாவில் அமைதியைக் கொண்டு வர ஒரு &#8220;வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டத்தை&#8221; அறிவித்த சில மணி நேரங்களிலேயே, இஸ்ரேல் இத்தகைய தாக்குதல்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>



<p class="wp-block-paragraph">இது சர்வதேச அமைதி முயற்சிகளை இஸ்ரேல் மதிக்கவில்லை என்பதையே காட்டுவதாகத் துருக்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, காசா நகரின் அல்-துர்ரா மருத்துவமனைக்கு அருகே டாங்கிகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மனிதாபிமானமற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">கள நிலவரத்தின்படி, காசா நகரின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-சூசி கோபுரம் மற்றும் கான் யூனிஸ் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் பல குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக உயிரிழந்துள்ளன. இது கடந்த சில வாரங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய உயிர்ச்சேதமாகும்.</p>



<p class="wp-block-paragraph">இது ஒருபுறமிருக்க, டெய்ர் அல்-பாலா(Deir al-Balah) பகுதியில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் மருந்து சேமிப்புக் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் அழிக்கப்படுவது, &#8220;மருத்துவத்தையே போர்க்கருவியாகப் பயன்படுத்துவதற்குச் சமம்&#8221; என காசா சுகாதாரத் துறை வேதனையுடன் தெரிவித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதற்குச் சர்வதேச சமூகம் நெதன்யாகுவின் ராணுவப் போக்கிற்கு எதிராக உறுதியான மற்றும் வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது அவசியமெனத் துருக்கி வலியுறுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">மனிதாபிமான விழுமியங்கள் மற்றும் சர்வதேசச் சட்டங்கள் காலில் மிதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும் எனத் துருக்கி விடுத்திருக்கும் இந்த வேண்டுகோள், ஐநா சபையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் பிணக்குவியல்கள் அதிகரித்துக் கொண்டே செல்வது உலக நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/the-move-by-israel-turkey-tears-into-netanyahu/">இஸ்ரேல் செய்த &#8216;சம்பவம்&#8217;! நெதன்யாகுவை கிழித்தெறிந்த &#8216;துருக்கி&#8217;!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்கா மூக்கை உடைத்த &#8216;ஈரான்&#8217;! ஓமனுடன் ரகசிய ஒப்பந்தம்? போரில் புதிய திருப்பம்!</title>
		<link>https://sathiyam.tv/trump-gets-a-rude-shock-america-backs-down-iran-goes-on-the-offensive-a-twist-in-the-conflict-2/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 02:19:37 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658551</guid>

					<description><![CDATA[<p>சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தின் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில், தற்போது ஒரு மிகப்பெரிய ராஜதந்திரத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் இணைந்து, அந்தப் பகுதியில் ஒரு புதிய கடல்வழிப் பாதையை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இரு நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்குப் பாதிப்பு இல்லாமல், ஒரு பொதுவான வழித்தடத்தை உருவாக்க இரு நாடுகளும் [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/trump-gets-a-rude-shock-america-backs-down-iran-goes-on-the-offensive-a-twist-in-the-conflict-2/">அமெரிக்கா மூக்கை உடைத்த &#8216;ஈரான்&#8217;! ஓமனுடன் ரகசிய ஒப்பந்தம்? போரில் புதிய திருப்பம்!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தின் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில், தற்போது ஒரு மிகப்பெரிய ராஜதந்திரத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ஈரான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் இணைந்து, அந்தப் பகுதியில் ஒரு புதிய கடல்வழிப் பாதையை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இரு நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்குப் பாதிப்பு இல்லாமல், ஒரு பொதுவான வழித்தடத்தை உருவாக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.</p>



<p class="wp-block-paragraph">உலக அளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய்யில் சுமார் 20 சதவீதம் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதில் இருந்து இந்தப் பாதையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.</p>



<p class="wp-block-paragraph"> தற்போது உருவாக்கப்பட உள்ள புதிய பாதையானது, வழக்கமாகப் பயன்படுத்தப்படும் வடக்கு அல்லது தெற்கு வழித்தடங்களுக்கு மாற்றாக, இரு நாடுகளின் தேசிய நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அமையும் எனத் தெரிகிறது.</p>



<p class="wp-block-paragraph">இந்தப் புதிய வழித்தடம் குறித்த விரிவான விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றாலும், பேச்சுவார்த்தைகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருவதை ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி உறுதிப்படுத்தியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு குறித்து ஈரான் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதற்கு அமெரிக்காவின் அத்துமீறல்களும், ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள கடல்வழி முற்றுகையுமே காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. </p>



<p class="wp-block-paragraph">ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம், இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டதால் முறிந்து போனது. இந்தச் சூழலில், ஓமன் நாட்டுடன் ஈரான் மேற்கொண்டுள்ள இந்தப் புதிய முயற்சி, பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதோடு, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை மீண்டும் சீரமைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">இருப்பினும், இந்தப் புதிய கடல்வழிப் பாதை ஒப்பந்தம் என்பது ஜலசந்தியை முழுமையாகத் திறப்பதற்குச் சமமானதா அல்லது இது ஒரு தனிப்பட்ட மாற்றுப் பாதையா என்பது குறித்து ஓமன் அரசு இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.</p>



<p class="wp-block-paragraph">ஒருபுறம் ராணுவப் பலப்பரீட்சை நடந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் இத்தகைய ராஜதந்திர நகர்வுகள் மூலம் ஒரு தீர்வை எட்ட ஈரான் முயற்சி செய்து வருவது சர்வதேச அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">இந்தப் புதிய ஒப்பந்தம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/trump-gets-a-rude-shock-america-backs-down-iran-goes-on-the-offensive-a-twist-in-the-conflict-2/">அமெரிக்கா மூக்கை உடைத்த &#8216;ஈரான்&#8217;! ஓமனுடன் ரகசிய ஒப்பந்தம்? போரில் புதிய திருப்பம்!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பல்பு வாங்கிய &#8216;டிரம்ப்&#8217;! இறங்கி வரும் அமெரிக்கா! அடித்து ஆடும் &#8216;ஈரான்&#8217;! போரில் &#8216;Twist &#8216;!</title>
		<link>https://sathiyam.tv/trump-gets-a-rude-shock-america-backs-down-iran-goes-on-the-offensive-a-twist-in-the-conflict/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 02:18:23 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658548</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு மிகப்பெரிய போர் மூளும் என ஒட்டுமொத்த உலகமே அஞ்சிக் கொண்டிருந்த வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள ஒரு அதிரடிப் பின்வாங்கல் உலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது. ஈரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் முக்கிய ராணுவ நிலைகளைத் தரைமட்டமாக்க &#8216;லாக் அண்ட் லோடட்&#8217; நிலையில் இருந்த அமெரிக்க ராணுவம், கடைசி நிமிடத்தில் தனது தாக்குதல் திட்டத்தைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. &#8220;மக்களைக் கொல்வதில் எனக்கு விருப்பமில்லை&#8221; என்று உருக்கமாகப் பேசியுள்ள [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/trump-gets-a-rude-shock-america-backs-down-iran-goes-on-the-offensive-a-twist-in-the-conflict/">பல்பு வாங்கிய &#8216;டிரம்ப்&#8217;! இறங்கி வரும் அமெரிக்கா! அடித்து ஆடும் &#8216;ஈரான்&#8217;! போரில் &#8216;Twist &#8216;!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு மிகப்பெரிய போர் மூளும் என ஒட்டுமொத்த உலகமே அஞ்சிக் கொண்டிருந்த வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள ஒரு அதிரடிப் பின்வாங்கல் உலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது. ஈரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் முக்கிய ராணுவ நிலைகளைத் தரைமட்டமாக்க &#8216;லாக் அண்ட் லோடட்&#8217; நிலையில் இருந்த அமெரிக்க ராணுவம், கடைசி நிமிடத்தில் தனது தாக்குதல் திட்டத்தைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. &#8220;மக்களைக் கொல்வதில் எனக்கு விருப்பமில்லை&#8221; என்று உருக்கமாகப் பேசியுள்ள ட்ரம்ப், ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின்னால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பலமான ராஜதந்திர அழுத்தம் இருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்க அதிபரின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானின் அண்டை நாடுகள் தன்னிடம் போரைத் தவிர்க்குமாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்ததாகத் தெரிவித்தார். குறிப்பாகச் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசிய ட்ரம்ப், போரைத் தவிர்த்து அமைதி உடன்படிக்கைக்குச் செல்லவே அண்டை நாடுகள் விரும்புவதை உணர்ந்துள்ளார். இதன் விளைவாக, இன்று திங்கட்கிழமை பிற்பகல் முதல் ஈரானுடன் மிக முக்கியமான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்க உள்ளன. உலக வர்த்தகத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியைத் துரிதமாகத் திறந்துவிடுவது மற்றும் ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்த ஆலோசனையின் முதன்மை நோக்கமாக அமையப் போகிறது.</p>



<p class="wp-block-paragraph">இருப்பினும், இந்த விவகாரத்தில் ஒரு மிகப்பெரிய மர்மமும் நீடிக்கிறது. ஒருபுறம் ஈரான் தான் போர் நிறுத்தத்தைக் கோரியதாகத் ட்ரம்ப் கூறி வரும் நிலையில், ஈரானிய அரசு ஊடகங்களோ அதனை முற்றிலுமாக மறுத்து வருகின்றன. ட்ரம்ப் சொல்வது ஒரு &#8220;புதிய பொய்&#8221; என்றும், தங்களது ராணுவம் எந்தவொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை என்றும் ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே நிலவும் இந்த முரண்பட்ட தகவல்கள், ஒருவேளை இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் மிகப்பெரிய மோதலுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">தற்போதைய நிலையில், இந்த அமைதி முயற்சி உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டால் மட்டுமே உலகப் பொருளாதாரம் மீண்டும் சீராகும். ஒருபுறம் மனிதாபிமானத்தைக் காட்டும் ட்ரம்ப், மறுபுறம் &#8220;நாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கத் தயார்&#8221; என எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். இன்று தொடங்கவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தே மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எதிர்காலமும், உலக அமைதியும் தீர்மானிக்கப்படும்.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/trump-gets-a-rude-shock-america-backs-down-iran-goes-on-the-offensive-a-twist-in-the-conflict/">பல்பு வாங்கிய &#8216;டிரம்ப்&#8217;! இறங்கி வரும் அமெரிக்கா! அடித்து ஆடும் &#8216;ஈரான்&#8217;! போரில் &#8216;Twist &#8216;!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாகிஸ்தானின் விபரீத முடிவு! இந்திய எல்லையில் &#8216;250&#8217; சீன பீரங்கிகள்!</title>
		<link>https://sathiyam.tv/pakistans-reckless-move-250-chinese-tanks-at-the-indian-border/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 02:16:17 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658545</guid>

					<description><![CDATA[<p>இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தற்போது மேற்கொண்டுள்ள ஒரு மிகப்பெரிய ராணுவ நகர்வு, சர்வதேசப் பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உளவுத்துறை வட்டாரங்கள் அளித்துள்ள தகவலின்படி, பாகிஸ்தான் தனது இந்திய எல்லையோரப் பகுதிகளில் சீனத் தயாரிப்பான 250 அதிநவீன பீரங்கிகளை அதிரடியாகக் குவித்துள்ளது. &#8216;SH-15&#8217; என்று அழைக்கப்படும் இந்த லாரி மூலம் இயக்கப்படும் பீரங்கிகள், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளன. பாகிஸ்தான் ராணுவம் தற்போது களமிறக்கியுள்ள இந்த SH-15 [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/pakistans-reckless-move-250-chinese-tanks-at-the-indian-border/">பாகிஸ்தானின் விபரீத முடிவு! இந்திய எல்லையில் &#8216;250&#8217; சீன பீரங்கிகள்!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தற்போது மேற்கொண்டுள்ள ஒரு மிகப்பெரிய ராணுவ நகர்வு, சர்வதேசப் பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உளவுத்துறை வட்டாரங்கள் அளித்துள்ள தகவலின்படி, பாகிஸ்தான் தனது இந்திய எல்லையோரப் பகுதிகளில் சீனத் தயாரிப்பான 250 அதிநவீன பீரங்கிகளை அதிரடியாகக் குவித்துள்ளது. &#8216;SH-15&#8217; என்று அழைக்கப்படும் இந்த லாரி மூலம் இயக்கப்படும் பீரங்கிகள், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளன.</p>



<p class="wp-block-paragraph">பாகிஸ்தான் ராணுவம் தற்போது களமிறக்கியுள்ள இந்த SH-15 பீரங்கிகள் 155 மில்லிமீட்டர் திறன் கொண்டவை. சாதாரண குண்டுகளைக் கொண்டு சுமார் 30 முதல் 40 கிலோமீட்டர் தூரம் வரை இவை தாக்குதல் நடத்தக்கூடியவை. ஆனால், ராக்கெட் தொழில்நுட்பம் கொண்ட சிறப்பு குண்டுகளைப் பயன்படுத்தினால், சுமார் 72 கிலோமீட்டர் தூரம் வரையிலான இந்திய இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வலிமை கொண்டவை. குறிப்பாக, ஒரு நிமிடத்திற்கு 6 ரவுண்டுகள் வரை சுடும் திறன் கொண்ட இந்த பீரங்கிகள், எதிரியின் பதில் தாக்குதலுக்கு முன்பே அந்த இடத்தை விட்டு மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் தப்பிச் செல்லும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.</p>



<p class="wp-block-paragraph">பாகிஸ்தானின் இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னால் ஒரு மிக முக்கியமான காரணம் இருப்பதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர். கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தகர்க்க இந்தியா நடத்திய &#8216;ஆபரேஷன் சிந்துர்&#8217; என்ற ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் தனது பாதுகாப்புத் திறனை மேம்படுத்தத் தீவிரமாக முயன்று வருகிறது. அந்தப் போரின் போது இந்திய ராணுவத்தின் துல்லியமான தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான், தற்போது சீன வல்லரசுடன் கைகோர்த்துத் தனது பீரங்கிப் படையைப் பலப்படுத்தி வருகிறது.</p>



<p class="wp-block-paragraph">சமீபத்தில் ராவல்பிண்டியில் நடைபெற்ற சீன ராணுவத்தின் 99-வது ஆண்டு விழாவில் பேசிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், &#8220;பாகிஸ்தான் மற்றும் சீனா இடையிலான நட்பு தனித்துவமானது மற்றும் காலத்தால் சோதிக்கப்பட்டது&#8221; என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். வெறும் ஆயுத விநியோகம் மட்டுமின்றி, இரு நாட்டு ராணுவங்களும் இணைந்து கூட்டுப் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. சீன தூதர் ஜியாங் ஜைடாங் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வு, ஆசியப் பிராந்தியத்தில் இந்த இரு நாடுகளின் ராணுவக் கூட்டணி எவ்வளவு வலுவாக உள்ளது என்பதை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">எல்லைப் பகுதியில் ஒரே நேரத்தில் 250 பீரங்கிகளைக் குவிப்பது என்பது சாதாரணமான ஒரு நடவடிக்கை அல்ல. இது ஒட்டுமொத்தப் பிராந்தியத்தின் அமைதியையும் பாதிக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் இந்தத் தொடர் ராணுவ நகர்வுகளை இந்தியப் பாதுகாப்புப் படைகளும் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் எல்லையில் நடக்கும் ஒவ்வொரு மாற்றத்தையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/pakistans-reckless-move-250-chinese-tanks-at-the-indian-border/">பாகிஸ்தானின் விபரீத முடிவு! இந்திய எல்லையில் &#8216;250&#8217; சீன பீரங்கிகள்!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஈரானுக்கு இந்தியா விடுத்த அதிரடி &#8216;எச்சரிக்கை&#8217;!</title>
		<link>https://sathiyam.tv/india-issues-a-stern-warning-to-iran/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Aug 2026 11:49:11 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658534</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷியுடன் ஒரு மிக முக்கியமான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். இந்த உரையாடலின் போது, சர்வதேசக் கடல் வழிப்பாதைகளில் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் மாலுமிகளை எந்தச் சூழ்நிலையிலும் இலக்காகக் கொள்ளக் கூடாது என ஜெய்சங்கர் ஈரானை மிக உறுதியாக வலியுறுத்தியுள்ளார். பிராந்தியத்தில் நிலவி வரும் தொடர் மோதல்கள் குறித்து இந்தியா [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/india-issues-a-stern-warning-to-iran/">ஈரானுக்கு இந்தியா விடுத்த அதிரடி &#8216;எச்சரிக்கை&#8217;!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷியுடன் ஒரு மிக முக்கியமான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இந்த உரையாடலின் போது, சர்வதேசக் கடல் வழிப்பாதைகளில் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் மாலுமிகளை எந்தச் சூழ்நிலையிலும் இலக்காகக் கொள்ளக் கூடாது என ஜெய்சங்கர் ஈரானை மிக உறுதியாக வலியுறுத்தியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph"> பிராந்தியத்தில் நிலவி வரும் தொடர் மோதல்கள் குறித்து இந்தியா தனது ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளதோடு, வன்முறையைக் கைவிட்டுத் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்தியாவின் இந்தக் கவலைக்கு மிக முக்கியமான காரணங்கள் உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் முதல் மத்திய கிழக்கில் நீடித்து வரும் இந்த மோதல்களால் இதுவரை 10 மாலுமிகள் உட்பட மொத்தம் 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">மேலும் 75-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் படுகாயமடைந்துள்ள அதிர்ச்சிகரமான தகவலை இந்திய அரசு நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">சவுதி அரேபியா, குவைத், ஓமன், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இந்தியர்கள் இந்த உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">இந்தியக் குடிமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு தாக்குதலையும் எந்தத் தரப்பு நடத்தினாலும் அதனை இந்தியா வன்மையாகக் கண்டிக்கும் என ஜெய்சங்கர் தனது உரையாடலில் தெளிவுபடுத்தியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">ஜெய்சங்கரின் இந்த ராஜதந்திர நகர்வு என்பது ஈரான் பக்கத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. இதேபோன்ற கவலையை உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் அவர் பகிர்ந்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">கருங்கடல் பகுதியில் இந்திய மாலுமிகள் மீதும், வணிகக் கப்பல்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அவர் உக்ரைனிடம் தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">குறிப்பாக &#8216;எம்.வி ஓமர்பி&#8217; (Omar B)என்ற கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததைக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், சர்வதேச விதிகளின்படி கடல் வழிப் போக்குவரத்துப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், ஈரானில் சிக்கியிருந்த சுமார் 2,557 இந்தியர்களை ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகள் வழியாக இந்திய அரசு பாதுகாப்பாக மீட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">தற்போது ஈரானில் சுமார் 7,000 இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அங்குள்ள மருத்துவ மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வெளியுறவுத்துறை எடுத்து வருகிறது.</p>



<p class="wp-block-paragraph">பாதுகாப்புச் சூழல் மேம்படும் வரை ஈரானுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு இடையே நிலவும் மோதல்களில் இந்தியர்களின் உயிரைப் பாதுகாப்பதே மத்திய அரசின் முதல் முன்னுரிமை என்பதை இந்த அதிரடி பேச்சுவார்த்தைகள் உறுதிப்படுத்தியுள்ளன.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/india-issues-a-stern-warning-to-iran/">ஈரானுக்கு இந்தியா விடுத்த அதிரடி &#8216;எச்சரிக்கை&#8217;!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரஷ்ய ராணுவத்தில் மாட்டிக்கொண்ட &#8216;இந்தியர்கள்&#8217;! மக்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!</title>
		<link>https://sathiyam.tv/indians-caught-in-the-russian-army-ministry-of-external-affairs-issues-warning-to-the-public/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Aug 2026 09:32:25 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658513</guid>

					<description><![CDATA[<p>ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் போர்க்களத்தில், இந்தியர்கள் சிக்கியிருப்பது தொடர்பான மிக முக்கியமான தகவல்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது பகிர்ந்துள்ளது. ரஷ்ய ராணுவத்தில் உதவிப் பணியாளர்களாகச் சேர்ந்து துயரத்தைச் சந்தித்து வரும் இந்தியர்களை மீட்பதற்கான ராஜதந்திர நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது தொடர்பாகத் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியக் குடிமக்களை மீட்பதில் அரசு காட்டி வரும் தீவிரத்தைப் புள்ளிவிபரங்களுடன் விளக்கினார். வெளியுறவுத்துறை [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/indians-caught-in-the-russian-army-ministry-of-external-affairs-issues-warning-to-the-public/">ரஷ்ய ராணுவத்தில் மாட்டிக்கொண்ட &#8216;இந்தியர்கள்&#8217;! மக்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் போர்க்களத்தில், இந்தியர்கள் சிக்கியிருப்பது தொடர்பான மிக முக்கியமான தகவல்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது பகிர்ந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ரஷ்ய ராணுவத்தில் உதவிப் பணியாளர்களாகச் சேர்ந்து துயரத்தைச் சந்தித்து வரும் இந்தியர்களை மீட்பதற்கான ராஜதந்திர நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">இது தொடர்பாகத் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியக் குடிமக்களை மீட்பதில் அரசு காட்டி வரும் தீவிரத்தைப் புள்ளிவிபரங்களுடன் விளக்கினார்.</p>



<p class="wp-block-paragraph">வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, ரஷ்ய ராணுவத்தில் இன்னும் சுமார் 24 இந்தியர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களை உடனடியாக விடுவிக்க ரஷ்யாவிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">மத்திய அரசின் தொடர் முயற்சியால் இதுவரை 139 இந்தியர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டு தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். இருப்பினும், மோசடி ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டு இன்னும் பல இந்தியர்கள் போர்க்களத்தில் சிக்கியிருப்பது கவலையளிக்கும் செய்தியாக உள்ளது.</p>



<p class="wp-block-paragraph">சமையல் செய்பவர்கள் மற்றும் உதவியாளர்கள் என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு, ரஷ்ய ராணுவத்தின் முன்னணிப் போர்க்களங்களில் இவர்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>



<p class="wp-block-paragraph">இந்த விவகாரத்தில் மிகுந்த வேதனை தரும் விஷயம் என்னவென்றால், ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றியவர்களில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் போர்க்களத்தில் உயிரிழந்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">பலர் காணாமல் போயுள்ள நிலையில், காயமடைந்தவர்களின் நிலையும் கேள்விக்குறியாக உள்ளது. இந்தச் சூழலில், வெளிநாடுகளில் அதிகச் சம்பளத்தில் வேலை தருவதாகக் கூறும் ஏஜென்ட்களின் கவர்ச்சிகரமான வார்த்தைகளை நம்பி, ஆபத்தான பணிகளுக்குச் செல்ல வேண்டாம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய இளைஞர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">பாதுகாப்பற்ற முறையில் வெளிநாடுகளுக்குச் செல்வது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதை இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.</p>



<p class="wp-block-paragraph">இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் தற்போது அதிரடியாகத் தலையிட்டுள்ளது. உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட, வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் ஒரு பிரத்யேக &#8216;நோடல் அதிகாரியை&#8217; (Nodal Officer) நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது மற்றும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பது போன்ற பணிகளை இந்த அதிகாரி துரிதப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்யாவுடன் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/indians-caught-in-the-russian-army-ministry-of-external-affairs-issues-warning-to-the-public/">ரஷ்ய ராணுவத்தில் மாட்டிக்கொண்ட &#8216;இந்தியர்கள்&#8217;! மக்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரஷ்யாவை அழிக்க ஏவுகணை கேட்ட &#8216;உக்ரைன்&#8217; &#8211; அதிர வைத்த அமெரிக்கா?</title>
		<link>https://sathiyam.tv/ukraine-sought-missiles-to-destroy-russia-did-the-us-deliver-a-shock/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Aug 2026 07:00:37 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658502</guid>

					<description><![CDATA[<p>உலக அரசியலில் உக்ரைன் &#8211; ரஷ்யா போர் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உக்ரைனுக்கு ஏவுகணை தொழில்நுட்பத்தை வழங்குவது குறித்து ஒரு மிக முக்கியமான கருத்தைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் தனது சொந்த மண்ணிலேயே அமெரிக்காவின் அதிநவீன &#8216;பேட்ரியாட்&#8217; (Patriot) ஏவுகணைகளைத் தயாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கு இன்னும் அமெரிக்கா பச்சைக்கொடி காட்டவில்லை என்பதை ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், இத்தகைய உயர் ரகசியத் தொழில்நுட்பத்தைப் [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/ukraine-sought-missiles-to-destroy-russia-did-the-us-deliver-a-shock/">ரஷ்யாவை அழிக்க ஏவுகணை கேட்ட &#8216;உக்ரைன்&#8217; &#8211; அதிர வைத்த அமெரிக்கா?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">உலக அரசியலில் உக்ரைன் &#8211; ரஷ்யா போர் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உக்ரைனுக்கு ஏவுகணை தொழில்நுட்பத்தை வழங்குவது குறித்து ஒரு மிக முக்கியமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">உக்ரைன் தனது சொந்த மண்ணிலேயே அமெரிக்காவின் அதிநவீன &#8216;பேட்ரியாட்&#8217; (Patriot) ஏவுகணைகளைத் தயாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கு இன்னும் அமெரிக்கா பச்சைக்கொடி காட்டவில்லை என்பதை ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், இத்தகைய உயர் ரகசியத் தொழில்நுட்பத்தைப் பிற நாடுகளுக்கு வழங்குவதில் அமெரிக்கா மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">மேரிலாந்தில் உள்ள கேம்ப் டேவிட் ஓய்வு இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அதிநவீன ஆயுதத் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வது என்பது ஒரு மிகப்பெரிய முடிவு என்று தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தற்காப்பிற்காகப் பேட்ரியாட் ஏவுகணைகளையும், தாக்குதல் நடத்துவதற்காகத் &#8216;டோமாஹாக்&#8217; (Tomahawk) ஏவுகணைகளையும் விரும்புவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஒருவருக்கு இத்தகைய தொழில்நுட்பத்தைக் கொடுத்துவிட்டு, அவர்கள் எதிர்காலத்தில் நமக்கு எதிராகத் திரும்ப மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இதனால் உக்ரைனுக்கு ஏவுகணை தயாரிப்பு உரிமம் வழங்குவதில் ட்ரம்ப் தற்போது பின்வாங்கியுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது.</p>



<p class="wp-block-paragraph">மறுபுறம், ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உக்ரைன் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ரஷ்யாவின் சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்த உக்ரைனிடம் இருக்கும் ஒரே ஆயுதம் பேட்ரியாட் ஏவுகணைகள் மட்டுமே.</p>



<p class="wp-block-paragraph">அவற்றின் இருப்பு தற்போது மிகவும் குறைந்துள்ளதால், உள்நாட்டிலேயே அவற்றைத் தயாரிக்க உக்ரைன் ஆர்வம் காட்டி வருகிறது. அமெரிக்காவின் இந்தத் தயக்கம் உக்ரைனின் தற்காப்பு அரணைப் பலவீனப்படுத்தும் என அந்நாட்டு அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.</p>



<p class="wp-block-paragraph">இருப்பினும், பேட்ரியாட் ஏவுகணைகளைத் தயாரிக்கும் &#8216;லாக்ஹீட் மார்ட்டின்&#8217; (Lockheed Martin) நிறுவனம் உக்ரைனுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>



<p class="wp-block-paragraph">அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகள் அதிபர் ஸெலென்ஸ்கியைச் சந்தித்துப் பேசியுள்ளதுடன், விரைவில் உக்ரைனுக்குத் தங்களது குழுவை அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டினாலும், அமெரிக்க அரசாங்கத்தின் இறுதி அனுமதி கிடைக்காதவரை இந்தத் திட்டம் நிறைவேறாது என்பதே தற்போதைய கள எதார்த்தம். அமெரிக்காவின் இந்த ராஜதந்திர நகர்வு, உக்ரைன் &#8211; ரஷ்யப் போரின் போக்கை எத்திசை நோக்கி நகர்த்தப் போகிறது என்பதை ஒட்டுமொத்த உலகமே உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/ukraine-sought-missiles-to-destroy-russia-did-the-us-deliver-a-shock/">ரஷ்யாவை அழிக்க ஏவுகணை கேட்ட &#8216;உக்ரைன்&#8217; &#8211; அதிர வைத்த அமெரிக்கா?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்த வார இறுதியில் &#8216;சம்பவம்&#8217;! ஈரானை மண்டியிட வைக்கப் போகும் அமெரிக்கா?</title>
		<link>https://sathiyam.tv/a-major-event-this-weekend-is-the-us-set-to-bring-iran-to-its-knees/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Aug 2026 06:34:32 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658500</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் தற்போது ஒரு மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த வார இறுதிக்குள் ஈரான் மீது ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த தனது ராணுவத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக &#8216;வால் ஸ்ட்ரீட் ஜர்னல்&#8217; வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை நிபந்தனையின்றி மண்டியிட வைப்பதும், பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதுமே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று அமெரிக்க உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/a-major-event-this-weekend-is-the-us-set-to-bring-iran-to-its-knees/">இந்த வார இறுதியில் &#8216;சம்பவம்&#8217;! ஈரானை மண்டியிட வைக்கப் போகும் அமெரிக்கா?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் தற்போது ஒரு மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த வார இறுதிக்குள் ஈரான் மீது ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த தனது ராணுவத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக &#8216;வால் ஸ்ட்ரீட் ஜர்னல்&#8217; வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை நிபந்தனையின்றி மண்டியிட வைப்பதும், பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதுமே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று அமெரிக்க உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">குறிப்பாக, ஈரானின் ராணுவ நிலைகளைத் தாண்டி, அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் போன்ற எரிசக்தி மையங்களைக் குறிவைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது போன்ற பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளைத் தாக்குவது போர்க் குற்றமாகக் கருதப்படலாம் என மனித உரிமை அமைப்புகள் எச்சரித்தாலும், ட்ரம்ப் தனது முடிவில் மிக உறுதியாக உள்ளார். மேரிலாந்தில் உள்ள கேம்ப் டேவிட் ஓய்வு இல்லத்தில் இருந்து ஆவேசமாகப் பேசிய ட்ரம்ப், &#8220;நாங்கள் ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம், எங்களது அடியைத் தாங்க முடியாது என அவர்கள் சொல்லும் வரை இந்தத் தாக்குதல் தொடரும்&#8221; என்று தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதல் குறித்த செய்திகள் வெளியான உடனேயே, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 86 டாலரைத் தாண்டியுள்ளது. இது ஏற்கனவே பணவீக்கத்தால் அவதிப்பட்டு வரும் உலக நாடுகளுக்கும், குறிப்பாகப் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் பெரும் சுமையாக மாறப்போகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த மோதலால், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருப்பதும், இயற்கை எரிவாயு மற்றும் உரங்களின் விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டிருப்பதும் உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது.</p>



<p class="wp-block-paragraph">மறுபுறம், அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள இடைத்தேர்தல் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டு வாடகை உயர்வால் அமெரிக்க மக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், இந்தப் போர் ட்ரம்ப்பின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது. தங்களுக்குத் தேவையான முறையில் ஈரான் பேச்சுவார்த்தைக்கு வரும் வரை இத்தகைய ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஒருபுறம் போருக்கான ஆயத்தங்கள், மறுபுறம் பொருளாதார நெருக்கடி என உலகம் ஒரு இக்கட்டான சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/a-major-event-this-weekend-is-the-us-set-to-bring-iran-to-its-knees/">இந்த வார இறுதியில் &#8216;சம்பவம்&#8217;! ஈரானை மண்டியிட வைக்கப் போகும் அமெரிக்கா?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போர் நிறுத்தத்தில் தொடரும் &#8216;கொடூரம்&#8217;! காசா மீது &#8216;இஸ்ரேல்&#8217; குண்டுவீச்சு! கதறும் பாலஸ்தீனியர்கள்!</title>
		<link>https://sathiyam.tv/atrocity-continues-amidst-the-ceasefire-israel-bombs-gaza-palestinians-cry-out-in-anguish/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jul 2026 05:41:12 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658445</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு இடையே, காசா பகுதியில் உள்ள அல்-முத்தாகின் மசூதி மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் இந்த மசூதியைத் தங்களது ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்தி வந்ததாகவும், அதன் காரணமாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காசாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள ஹமாஸ் அமைப்பின் பல [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/atrocity-continues-amidst-the-ceasefire-israel-bombs-gaza-palestinians-cry-out-in-anguish/">போர் நிறுத்தத்தில் தொடரும் &#8216;கொடூரம்&#8217;! காசா மீது &#8216;இஸ்ரேல்&#8217; குண்டுவீச்சு! கதறும் பாலஸ்தீனியர்கள்!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு இடையே, காசா பகுதியில் உள்ள அல்-முத்தாகின் மசூதி மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ஹமாஸ் அமைப்பினர் இந்த மசூதியைத் தங்களது ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்தி வந்ததாகவும், அதன் காரணமாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை விளக்கம் அளித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காசாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள ஹமாஸ் அமைப்பின் பல ஆயுதக் கிடங்குகளைத் தகர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல், தாக்குதலுக்கு முன்பாகவே அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இருப்பினும், இந்தத் தாக்குதலால் மசூதி முற்றிலும் தரைமட்டமாகியுள்ள நிலையில், அங்குத் தங்கியிருந்த இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">காசாவின் மத விவகாரத்துறை அமைச்சகம் இஸ்ரேலின் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது. இது போன்ற பொய்க் காரணங்களைக் கூறி இஸ்ரேல் புனிதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், இது ஒரு மனிதாபிமானமற்ற போர் குற்றம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கச் சர்வதேச நாடுகள் உடனடியாகத் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">காசாவில் கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒரு தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும், இதுவரை சுமார் ஆயிரத்து 207 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.</p>



<p class="wp-block-paragraph">ஒவ்வொரு மணிநேரமும் தாக்குதல்கள் தொடர்வதாகவும், மக்கள் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>



<p class="wp-block-paragraph">போர் நிறுத்தம் என்ற பெயரில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவது தங்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் காசா மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை காசாவில் சுமார் 164 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் சேதமடைந்துள்ளன.</p>



<p class="wp-block-paragraph">அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் புனிதத் தலங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">உலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியிலும் மத்திய கிழக்கில் வன்முறைத் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.</p>



<figure class="wp-block-embed is-type-rich is-provider-x wp-block-embed-x"><div class="wp-block-embed__wrapper">
<blockquote class="twitter-tweet" data-width="550" data-dnt="true"><p lang="en" dir="ltr">Footage showed the moment an Israeli airstrike hit a mosque in Gaza City, causing an explosion <a href="https://t.co/QiEKAPPw0L">https://t.co/QiEKAPPw0L</a> <a href="https://t.co/SuZLFomhbQ">pic.twitter.com/SuZLFomhbQ</a></p>&mdash; Reuters (@Reuters) <a href="https://x.com/Reuters/status/2082537893797745136?ref_src=twsrc%5Etfw">July 29, 2026</a></blockquote><script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
</div></figure>
<p>The post <a href="https://sathiyam.tv/atrocity-continues-amidst-the-ceasefire-israel-bombs-gaza-palestinians-cry-out-in-anguish/">போர் நிறுத்தத்தில் தொடரும் &#8216;கொடூரம்&#8217;! காசா மீது &#8216;இஸ்ரேல்&#8217; குண்டுவீச்சு! கதறும் பாலஸ்தீனியர்கள்!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
