<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Digital Special - Sathiyam TV</title>
	<atom:link href="https://sathiyam.tv/category/digital-special/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://sathiyam.tv/category/digital-special/</link>
	<description></description>
	<lastBuildDate>Sun, 26 Jul 2026 12:16:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://sathiyam.tv/wp-content/uploads/2024/11/cropped-cropped-Sathiyam-New-Logo-300x300-1-32x32.jpg</url>
	<title>Digital Special - Sathiyam TV</title>
	<link>https://sathiyam.tv/category/digital-special/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இன்னும் 5 நாள் தான் இருக்கு!! அதுக்குள்ள இதை செஞ்சிடுங்க!!</title>
		<link>https://sathiyam.tv/there-are-only-5-days-left-get-this-done-by-then-otherwise-you-wont-get-your-ration-supplies/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Jul 2026 12:16:11 +0000</pubDate>
				<category><![CDATA[Digital Special]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658278</guid>

					<description><![CDATA[<p>தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு என்பது அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் பெறுவதற்கும், பல்வேறு அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த நிலையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் கட்டாயமாக இ-கேஒய்சி (e-KYC) செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அந்தந்த மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்து வருகின்றனர். ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களது பகுதிக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/there-are-only-5-days-left-get-this-done-by-then-otherwise-you-wont-get-your-ration-supplies/">இன்னும் 5 நாள் தான் இருக்கு!! அதுக்குள்ள இதை செஞ்சிடுங்க!!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு என்பது அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் பெறுவதற்கும், பல்வேறு அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த நிலையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் கட்டாயமாக இ-கேஒய்சி (e-KYC) செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அந்தந்த மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்து வருகின்றனர்.</p>



<p class="wp-block-paragraph">ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களது பகுதிக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்கு நேரில் சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்காதவர்களுக்கு எதிர்காலத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">இந்த இ-கேஒய்சி நடவடிக்கையின் முக்கிய நோக்கம் போலி ரேஷன் கார்டுகளை கண்டறிந்து நீக்குவதும், தகுதியற்ற நபர்கள் மானியப் பொருட்களை பெறுவதைத் தடுப்பதுமாகும். குறிப்பாக, இறந்தவர்களின் பெயர்களை நீக்காமல் தொடர்ந்து பொருட்கள் பெறுதல் மற்றும் ரேஷன் பொருட்களை முறைகேடாக பெற்று வெளியில் விற்பனை செய்வது போன்ற செயல்களை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இதுவரை கைரேகை பதிவு செய்யாதவர்கள் ஜூலை 31-க்குள் அதை முடிக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா என்பதை நியாயவிலைக் கடை ஊழியர்களிடம் உறுதி செய்து கொள்ளலாம். மேலும், ரேஷன் கார்டில் இறந்தவர்களின் பெயர்கள் இருந்தால், மரணச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பித்து நீக்கலாம். இதே சேவையை TNPDS இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் மேற்கொள்ளும் வசதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/there-are-only-5-days-left-get-this-done-by-then-otherwise-you-wont-get-your-ration-supplies/">இன்னும் 5 நாள் தான் இருக்கு!! அதுக்குள்ள இதை செஞ்சிடுங்க!!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மொத்தமாக மாறப்போகும் &#8216;ரேஷன் கடை&#8217; விதிமுறை! பழைய கார்டு இனி செல்லாதா?</title>
		<link>https://sathiyam.tv/ration-shop-rules-set-for-a-complete-overhaul-will-old-cards-no-longer-be-valid/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Jul 2026 07:30:42 +0000</pubDate>
				<category><![CDATA[Digital Special]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658271</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவின் ரேஷன் விநியோக முறையில் ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்த மத்திய அரசு தற்போது தயாராகி வருகிறது. இது தொடர்பாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையிலான நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய அரசுக்கு மிக முக்கியமான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பிலான &#8216;ஸ்மார்ட்-பிடிஎஸ்&#8217; (SMART-PDS) என்ற நவீன தொழில்நுட்பத் திட்டத்தை நாடு முழுவதும் விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த அறிக்கையின் பிரதான [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/ration-shop-rules-set-for-a-complete-overhaul-will-old-cards-no-longer-be-valid/">மொத்தமாக மாறப்போகும் &#8216;ரேஷன் கடை&#8217; விதிமுறை! பழைய கார்டு இனி செல்லாதா?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">இந்தியாவின் ரேஷன் விநியோக முறையில் ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்த மத்திய அரசு தற்போது தயாராகி வருகிறது. இது தொடர்பாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையிலான நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய அரசுக்கு மிக முக்கியமான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பிலான &#8216;ஸ்மார்ட்-பிடிஎஸ்&#8217; (SMART-PDS) என்ற நவீன தொழில்நுட்பத் திட்டத்தை நாடு முழுவதும் விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த அறிக்கையின் பிரதான அம்சம். இதன் மூலம், ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவது முதல் அவை மக்களின் கைகளுக்குச் சென்றடைவது வரை அனைத்துமே ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தின் கீழ் கொண்டுவரப்படும்.</p>



<p class="wp-block-paragraph">இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தின் ஒரு பகுதியாக, கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு டிசம்பர் வரை, நாடு முழுவதும் சுமார் 6 கோடியே 77 லட்சம் போலி மற்றும் தகுதியற்ற ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. இது ஒரு மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">இருப்பினும், தரவு ஆய்வுகளின் மூலம் தற்போது மேலும் 2 கோடியே 91 லட்சம் பயனாளிகளின் விவரங்கள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள், ஒரே பெயரில் பல இடங்களில் இருப்பவர்கள் மற்றும் 100 வயதைக் கடந்தவர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் இந்தப் பெயர்கள் உள்ளன.</p>



<p class="wp-block-paragraph">இந்தச் சந்தேகத்திற்குரிய கார்டுகளைக் கள ஆய்வு செய்து, தகுதியற்றவர்களை நீக்கும் அதே வேளையில், தகுதியான எந்தவொரு ஏழை குடும்பமும் விடுபடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று கனிமொழி தலைமையிலான குழு வலியுறுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">மற்றொரு சிறப்பம்சமாக, மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயமான &#8216;இ-ருபீ&#8217; (e-Rupee) மூலம் ரேஷன் மானியங்களை வழங்கும் ஒரு முன்னோடித் திட்டத்தை விரிவுபடுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது மானியம் வழங்குவதில் உள்ள கசிவுகளைத் தடுத்து, நூறு சதவீத வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும்.</p>



<p class="wp-block-paragraph">மேலும், &#8216;அன்ன சக்ரா&#8217; (Anna Chakra) போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், உணவு தானியங்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்துச் செலவில் ஆண்டுக்குச் சுமார் 250 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">தமிழ்நாட்டில் இணைய வசதி இல்லாத பகுதிகளில் உள்ள 403 ரேஷன் கடைகளுக்கும் சீரான டிஜிட்டல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக, ரேஷன் முறையை வெறும் உணவு வழங்கும் இடமாக மட்டும் பார்க்காமல், நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒரு வலிமையான உணவுப் பாதுகாப்பு அமைப்பாக மாற்ற இந்தச் சீர்திருத்தங்கள் உதவும்.</p>



<p class="wp-block-paragraph">போலி கார்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உண்மையான பயனாளிகளுக்குப் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த &#8216;ஸ்மார்ட்-பிடிஎஸ்&#8217; திட்டத்தின் இறுதி இலக்காகும். 80 கோடி மக்களின் பசியைத் தீர்க்கும் இந்தத் திட்டத்தில் வரப்போகும் இந்த டிஜிட்டல் மாற்றங்கள், இந்திய பொது விநியோகத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/ration-shop-rules-set-for-a-complete-overhaul-will-old-cards-no-longer-be-valid/">மொத்தமாக மாறப்போகும் &#8216;ரேஷன் கடை&#8217; விதிமுறை! பழைய கார்டு இனி செல்லாதா?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எடை குறைந்த புதிய LPG சிலிண்டர்… BPCL-ன் சூப்பர் அறிவிப்பு!!</title>
		<link>https://sathiyam.tv/new-lightweight-lpg-cylinder-bpcls-great-announcement/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Jul 2026 11:43:40 +0000</pubDate>
				<category><![CDATA[Digital Special]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658258</guid>

					<description><![CDATA[<p>பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் &#8216;பாரத்கேஸ் லைட் ஜிப்&#8217; என்ற புதிய பிரீமியம் எல்பிஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் முக்கிய அம்சமாக, வழக்கமான எஃகு சிலிண்டர்களைவிட மிகவும் எடை குறைந்த லைட் காம்போசிட் எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படுகிறது. இந்த சிலிண்டர் துருப்பிடிக்காத தன்மை கொண்டது. மேலும், சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு மீதமுள்ளது என்பதை வெளிப்புறத்திலிருந்தே எளிதாகக் காண முடியும். பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், நவீன மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பும் [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/new-lightweight-lpg-cylinder-bpcls-great-announcement/">எடை குறைந்த புதிய LPG சிலிண்டர்… BPCL-ன் சூப்பர் அறிவிப்பு!!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் &#8216;பாரத்கேஸ் லைட் ஜிப்&#8217; என்ற புதிய பிரீமியம் எல்பிஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்த சேவையின் முக்கிய அம்சமாக, வழக்கமான எஃகு சிலிண்டர்களைவிட மிகவும் எடை குறைந்த லைட் காம்போசிட் எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படுகிறது. இந்த சிலிண்டர் துருப்பிடிக்காத தன்மை கொண்டது.</p>



<p class="wp-block-paragraph">மேலும், சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு மீதமுள்ளது என்பதை வெளிப்புறத்திலிருந்தே எளிதாகக் காண முடியும். பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், நவீன மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பும் இதில் இடம்பெற்றுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">புதிய எல்பிஜி இணைப்பைப் பெறும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளதுடன், சிலிண்டர் விநியோகமும் விரைவாக நடைபெறும் வகையில் இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">தற்போது மும்பையில் அறிமுகமாகியுள்ள இந்த திட்டத்தை, 2026 ஆகஸ்ட் 15-க்குள் 24 மாநிலங்களில் உள்ள 100 நகரங்களுக்கு விரிவுபடுத்த BPCL இலக்கு நிர்ணயித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இதற்கு முன்பு, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனம் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் தேவைக்கேற்ப எல்பிஜி சிலிண்டர் விநியோக சேவையை பெங்களூருவில் தொடங்கியது.</p>



<p class="wp-block-paragraph">அதன் மூலம் வாடிக்கையாளர்கள் புதிய 10 கிலோ HP நாவ்யா காம்போசிட் சிலிண்டரை எரிவாயு இணைப்பு இல்லாமலேயே ஆர்டர் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இவ்விரு நிறுவனங்களின் புதிய முயற்சிகளும், எரிவாயு சேவைகளை நவீனமாகவும், எளிதாகவும், விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகின்றன.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/new-lightweight-lpg-cylinder-bpcls-great-announcement/">எடை குறைந்த புதிய LPG சிலிண்டர்… BPCL-ன் சூப்பர் அறிவிப்பு!!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு மெட்ரோ திட்டம்.. முழு விவரம் ….</title>
		<link>https://sathiyam.tv/kilambakkam-chengalpattu-metro-project-full-details/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Jul 2026 08:44:07 +0000</pubDate>
				<category><![CDATA[Digital Special]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658244</guid>

					<description><![CDATA[<p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் தற்போது சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை மெட்ரோ சேவையை மேலும் நீட்டிக்கும் திட்டத்திற்கும் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இந்த நீட்டிப்பு சென்னை புறநகர் மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். கிளாம்பாக்கம்–செங்கல்பட்டு இடையே நெடுஞ்சாலைத்துறை அமைக்கவுள்ள 6 வழி உயர்மட்ட மேம்பால சாலையுடன் இணைந்து டபுள் [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/kilambakkam-chengalpattu-metro-project-full-details/">கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு மெட்ரோ திட்டம்.. முழு விவரம் ….</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் தற்போது சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீட்டிக்கப்பட உள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை மெட்ரோ சேவையை மேலும் நீட்டிக்கும் திட்டத்திற்கும் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">இந்த நீட்டிப்பு சென்னை புறநகர் மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். கிளாம்பாக்கம்–செங்கல்பட்டு இடையே நெடுஞ்சாலைத்துறை அமைக்கவுள்ள 6 வழி உயர்மட்ட மேம்பால சாலையுடன் இணைந்து டபுள் டக்கர் வடிவில் மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது.</p>



<p class="wp-block-paragraph">திட்ட அறிக்கையில் பயணிகள் எண்ணிக்கை, மண் தன்மை, நிலையங்கள் அமைக்கும் இடங்கள் மற்றும் திட்டச் செலவு போன்றவை ஆய்வு செய்யப்படுகின்றன.</p>



<p class="wp-block-paragraph">இந்த வழித்தடம் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் போன்ற முக்கிய பகுதிகளை இணைக்கும். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சென்னை விமான நிலையம் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையம் ஆகிய முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு சிறந்த இணைப்பை வழங்கும்.</p>



<p class="wp-block-paragraph">வெளிவட்டச் சாலையுடன் இணைப்பதற்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப் பாதைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">மொத்தம் 15.46 கிலோமீட்டர் நீளத்தில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் 13 உயர்மட்ட மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேம்பாட்டு சாலைகள் உள்ளிட்ட இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.9,335 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/kilambakkam-chengalpattu-metro-project-full-details/">கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு மெட்ரோ திட்டம்.. முழு விவரம் ….</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>&#8216;கம்பீர் ஒரு &#8216;முட்டாள்&#8217;!&#8217; சூர்யவன்ஷி பஞ்சாயத்தில் பொளந்து கட்டிய ஸ்ரீகாந்த்!!</title>
		<link>https://sathiyam.tv/gambhir-is-a-fool-srikkanth-lashes-out-amidst-the-sooryavanshi-controversy/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Jul 2026 07:26:35 +0000</pubDate>
				<category><![CDATA[Digital Special]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658237</guid>

					<description><![CDATA[<p>ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி செய்த சாதனைதான் இப்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் ஹாட் டாப்பிக். வெறும் 18 பந்துகளில் அரைசதம் அடித்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் 50 ரன்கள் கடந்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். ஆனால், இந்த இமாலய வெற்றிக்கு மத்தியிலும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தற்போது ஒரு மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். முன்னாள் [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/gambhir-is-a-fool-srikkanth-lashes-out-amidst-the-sooryavanshi-controversy/">&#8216;கம்பீர் ஒரு &#8216;முட்டாள்&#8217;!&#8217; சூர்யவன்ஷி பஞ்சாயத்தில் பொளந்து கட்டிய ஸ்ரீகாந்த்!!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி செய்த சாதனைதான் இப்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் ஹாட் டாப்பிக். வெறும் 18 பந்துகளில் அரைசதம் அடித்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் 50 ரன்கள் கடந்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">ஆனால், இந்த இமாலய வெற்றிக்கு மத்தியிலும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தற்போது ஒரு மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். முன்னாள் பிசிசிஐ தேர்வாளரும், 1983 உலகக்கோப்பை நாயகருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கம்பீரின் ஒரு முடிவை முட்டாள்தனமானது என சாடிப் பேசியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது, தனது முதல் மூன்று போட்டிகளில் வைபவ் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை. வெறும் 14, 13 மற்றும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், அவரை ஐந்தாவது போட்டியில் இருந்து கம்பீர் அதிரடியாக நீக்கினார்.</p>



<p class="wp-block-paragraph">இதைக் குறிப்பிட்டுப் பேசிய ஸ்ரீகாந்த், &#8220;வெறும் மூன்று போட்டிகளில் சோபிக்கவில்லை என்பதற்காக 15 வயது சிறுவனின் தன்னம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் அவரை அணியிலிருந்து நீக்கியது கௌதம் கம்பீரின் முட்டாள்தனமான செயல்&#8221; என்று மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">அந்தச் சிறிய வயதில் ஒரு வீரருக்குத் தேவையான ஆதரவை வழங்காமல், அவரை நீக்கியது எவ்விதத்தில் நியாயம் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலைப் பாராட்டிய ஸ்ரீகாந்த், அவர் எந்த ஒரு ஷாட்டையும் வலுக்கட்டாயமாக அடிக்காமல், மிகவும் இயல்பாகவும் நேர்த்தியாகவும் விளையாடுவதாகக் கூறினார்.</p>



<p class="wp-block-paragraph">குறிப்பாக 250 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ரன்களைக் குவிக்கும் விதம் வியக்க வைக்கிறது. பொதுவாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த ஒரு வீரர், தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள மிகவும் நிதானமாக விளையாட நினைப்பார்.</p>



<p class="wp-block-paragraph">ஆனால் வைபவ் எதற்கும் அஞ்சாமல் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்ததுதான் அவரது மிகப்பெரிய பலம் என்று ஸ்ரீகாந்த் புகழ்ந்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இங்கிலாந்து தொடருக்குப் பிறகு தனது வீட்டிற்குச் செல்லாமல், ராஜஸ்தான் ராயல்ஸ் அகாடமிக்குச் சென்று ஷார்ட் பிட்ச் பந்துகளை எப்படி எதிர்கொள்வது என வைபவ் பயிற்சி மேற்கொண்டது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.</p>



<p class="wp-block-paragraph">தற்போது கம்பீர் இந்திய அணியுடன் இல்லாத நிலையில், வி.வி.எஸ் லக்ஷ்மனின் வழிகாட்டுதலில் ஜிம்பாப்வேயில் வைபவ் அசத்தி வருகிறார்.</p>



<p class="wp-block-paragraph">ஒரு ஸ்பெஷலான வீரரை அடையாளம் காண்பதில் கம்பீர் தவறிவிட்டாரா என்ற விவாதம் தற்போது கிளம்பியுள்ளது. ஸ்ரீகாந்தின் இந்த நேரடியான பேச்சு, இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீருக்கு ஒரு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/gambhir-is-a-fool-srikkanth-lashes-out-amidst-the-sooryavanshi-controversy/">&#8216;கம்பீர் ஒரு &#8216;முட்டாள்&#8217;!&#8217; சூர்யவன்ஷி பஞ்சாயத்தில் பொளந்து கட்டிய ஸ்ரீகாந்த்!!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செவ்வாய் கிரகத்தில் மர்மமான ஒளி! பூமியைப் போலவே மாறும் &#8216;சிவப்பு கிரகம்&#8217;!</title>
		<link>https://sathiyam.tv/mysterious-light-on-mars-the-red-planet-is-transforming-to-resemble-earth/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Jul 2026 06:00:18 +0000</pubDate>
				<category><![CDATA[Digital Special]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658229</guid>

					<description><![CDATA[<p>விண்வெளி ஆராய்ச்சியில் சிவப்புக் கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் குறித்த ஒரு மிக முக்கியமான ரகசியத்தை நாசா விஞ்ஞானிகள் தற்போது உடைத்துள்ளனர். பூமியில் வடதுருவ மற்றும் தென்துருவப் பகுதிகளில் வானத்தில் தோன்றும் &#8216;அரோரா&#8217; எனப்படும் கண்கவர் ஒளி விந்தைகளைப் போலவே, செவ்வாய் கிரகத்திலும் இந்த அதிசய நிகழ்வு ஏற்படுவதை நாசா உறுதி செய்துள்ளது. ஆனால், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் இந்த ஒளிகள் தோன்றும் விதம் பூமியில் நடக்கும் அதே அறிவியல் நடைமுறையைப் போலவே [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/mysterious-light-on-mars-the-red-planet-is-transforming-to-resemble-earth/">செவ்வாய் கிரகத்தில் மர்மமான ஒளி! பூமியைப் போலவே மாறும் &#8216;சிவப்பு கிரகம்&#8217;!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">விண்வெளி ஆராய்ச்சியில் சிவப்புக் கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் குறித்த ஒரு மிக முக்கியமான ரகசியத்தை நாசா விஞ்ஞானிகள் தற்போது உடைத்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">பூமியில் வடதுருவ மற்றும் தென்துருவப் பகுதிகளில் வானத்தில் தோன்றும் &#8216;அரோரா&#8217; எனப்படும் கண்கவர் ஒளி விந்தைகளைப் போலவே, செவ்வாய் கிரகத்திலும் இந்த அதிசய நிகழ்வு ஏற்படுவதை நாசா உறுதி செய்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ஆனால், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் இந்த ஒளிகள் தோன்றும் விதம் பூமியில் நடக்கும் அதே அறிவியல் நடைமுறையைப் போலவே இருப்பதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p>



<p class="wp-block-paragraph">நாசாவின் &#8216;மாவென்&#8217; (MAVEN) விண்கலம் சேகரித்த தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, தற்போது &#8216;நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்&#8217; இதழில் வெளியாகி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">பூமியில் &#8216;டஞ்சி சுழற்சி&#8217; (Dungey cycle) எனப்படும் ஒரு நிகழ்வு மூலம் இந்த அரோராக்கள் உருவாகின்றன. அதாவது, சூரியனிடமிருந்து வரும் காந்தப்புல அலைகள் பூமியின் காந்தப்புலத்தோடு மோதி, மின்னூட்டம் பெற்ற துகள்களை வளிமண்டலத்திற்குள் அனுப்பும்போது இந்த வண்ணமயமான ஒளிகள் தோன்றுகின்றன.</p>



<p class="wp-block-paragraph">செவ்வாய் கிரகத்தைப் பொறுத்தவரை, அதற்குப் பூமிக்கு இருப்பதைப் போல ஒட்டுமொத்த கிரகத்தையும் பாதுகாக்கும் ஒரு மிகப்பெரிய காந்தப்புலம் கிடையாது. மாறாக, சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அங்கு உறைந்து போன லாவா குழம்புகளால் உருவான சிறிய அளவிலான காந்த மண்டலங்கள் ஆங்காங்கே உள்ளன.</p>



<p class="wp-block-paragraph">இந்தச் சிறிய காந்த மண்டலங்களுக்கு மேல், பூமியில் நடப்பதைப் போலவே அதே &#8216;டஞ்சி சுழற்சி&#8217; மிகச் சிறிய அளவில் நடைபெறுவதை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">இந்த மகத்தான கண்டுபிடிப்பிற்கு அடிப்படையாக இருந்தது நாசாவின் &#8216;மாவென்&#8217; விண்கலம் ஆகும். கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, அதன் பணி 2026 ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வந்தாலும், அது அதற்கு முன்னதாக அனுப்பிய கோடிக்கணக்கான தகவல்கள் இன்றும் புதிய உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன.</p>



<p class="wp-block-paragraph">இந்த ஆய்வின் மூலம் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் காந்தப்புலங்கள் சூரியனுடன் எப்படி உரையாடுகின்றன என்பதை நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.</p>



<p class="wp-block-paragraph">ஏன் பூமி மற்றும் செவ்வாய் கிரகம் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான இயற்பியல் விதிகளைக் கொண்டிருந்தாலும், வளர்ச்சியில் இவ்வளவு மாறுபட்டு இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">வருங்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு, அங்கிருக்கும் வளிமண்டலச் சூழலைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானது.</p>



<p class="wp-block-paragraph">அந்த வகையில், செவ்வாயின் வானத்தில் தோன்றும் இந்த மர்மமான ஒளிகள் மனித குலத்தின் அடுத்தக்கட்ட விண்வெளிப் பயணத்திற்கு ஒரு புதிய வழிகாட்டியாக அமையப் போகின்றன.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/mysterious-light-on-mars-the-red-planet-is-transforming-to-resemble-earth/">செவ்வாய் கிரகத்தில் மர்மமான ஒளி! பூமியைப் போலவே மாறும் &#8216;சிவப்பு கிரகம்&#8217;!</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>&#8216;தேர்தலை நிறுத்திய துணிச்சல்!&#8217; கோட்டைக்குத் திரும்பிய &#8216;மாஸ்&#8217; அதிகாரி! யார் இந்த ராஜேஷ் லக்கானி?</title>
		<link>https://sathiyam.tv/the-audacity-to-halt-the-election-the-powerhouse-official-returns-to-the-secretariat-who-is-rajesh-lakhoni/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Jul 2026 05:29:10 +0000</pubDate>
				<category><![CDATA[Digital Special]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658226</guid>

					<description><![CDATA[<p>தமிழக அரசு நிர்வாகத்தில் தற்போது ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தின் மிகவும் துணிச்சலான மற்றும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படும் ராஜேஷ் லக்கானி, மீண்டும் தமிழகப் பணிக்குத் திரும்பியுள்ளார். மத்திய அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மாநிலப் பணிக்குத் திரும்பியுள்ள அவருக்கு, தமிழக அரசு தற்போது மிக முக்கியமான மற்றும் அதிகாரம் மிக்கப் பதவியை வழங்கியுள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், மாநிலத்தின் &#8216;நில நிர்வாக ஆணையராக&#8217; ராஜேஷ் லக்கானி முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளார். [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/the-audacity-to-halt-the-election-the-powerhouse-official-returns-to-the-secretariat-who-is-rajesh-lakhoni/">&#8216;தேர்தலை நிறுத்திய துணிச்சல்!&#8217; கோட்டைக்குத் திரும்பிய &#8216;மாஸ்&#8217; அதிகாரி! யார் இந்த ராஜேஷ் லக்கானி?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">தமிழக அரசு நிர்வாகத்தில் தற்போது ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தின் மிகவும் துணிச்சலான மற்றும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படும் ராஜேஷ் லக்கானி, மீண்டும் தமிழகப் பணிக்குத் திரும்பியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">மத்திய அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மாநிலப் பணிக்குத் திரும்பியுள்ள அவருக்கு, தமிழக அரசு தற்போது மிக முக்கியமான மற்றும் அதிகாரம் மிக்கப் பதவியை வழங்கியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், மாநிலத்தின் &#8216;நில நிர்வாக ஆணையராக&#8217; ராஜேஷ் லக்கானி முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">2029-ஆம் ஆண்டு மே மாதம் வரை நீடிக்கும் இவரது இந்தப் புதிய பதவிக்காலம், மாநிலத்தின் நில நிர்வாகத்தில் ஒரு மிகப்பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">ராஜேஷ் லக்கானி என்றாலே அரசு வட்டாரங்களில் ஒருவிதக் கண்டிப்பும், மரியாதையும் உண்டு. 1992-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகத் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், தேர்தல் அதிகாரியாக இருந்தபோது செய்த அதிரடி நடவடிக்கைகளை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. </p>



<p class="wp-block-paragraph">தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக, பணப்பட்டுவாடா புகாரால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதித் தேர்தல்களை நிறுத்தி உத்தரவிட்டவர் இவர்தான்.</p>



<p class="wp-block-paragraph">அதேபோல், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யப் பரிந்துரைத்ததும் இவரே. நேர்மைக்கும் துணிச்சலுக்கும் பெயர்பெற்ற அதிகாரியான இவர், கடந்த காலங்களில் மின்சார வாரியத் தலைவர் மற்றும் பல்வேறு முக்கியத் துறைகளின் செயலாளராகப் பணியாற்றித் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசுப் பணிக்குச் சென்று நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராகப் பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி, தனது தனிப்பட்ட காரணங்களுக்காக மீண்டும் தமிழகப் பணிக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph"> அதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் இவருக்கு இந்த நில நிர்வாக ஆணையர் பொறுப்பை வழங்கியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">நில நிர்வாக ஆணையர் என்பது மாநிலம் முழுவதும் உள்ள அரசு நிலங்களைப் பாதுகாப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது போன்ற மிகச் சிக்கலான பணிகளைச் செய்யும் ஒரு முக்கியமான துறையாகும்.</p>



<p class="wp-block-paragraph">அரசின் மெகா திட்டங்களுக்கு நிலம் தொடர்பான பிரச்சனைகள் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், அரசு நிலங்கள் முறைகேடாக ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்கவும் ஒரு கண்டிப்பான மற்றும் சுறுசுறுப்பான அதிகாரி தேவை என்ற அடிப்படையில்தான் ராஜேஷ் லக்கானி இந்தப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">சிக்கலான நிலப் பதிவேடுகளை முறைப்படுத்துவது முதல், நில உரிமைகள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளுக்குத் தீர்வு காண்பது வரை பல சவால்கள் இவருக்குக் காத்திருக்கின்றன. ராஜேஷ் லக்கானியின் இந்த வருகை, தமிழக வருவாய்த் துறை மற்றும் நில நிர்வாகத்தில் ஒரு புதிய வேகத்தையும் வெளிப்படைத் தன்மையையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/the-audacity-to-halt-the-election-the-powerhouse-official-returns-to-the-secretariat-who-is-rajesh-lakhoni/">&#8216;தேர்தலை நிறுத்திய துணிச்சல்!&#8217; கோட்டைக்குத் திரும்பிய &#8216;மாஸ்&#8217; அதிகாரி! யார் இந்த ராஜேஷ் லக்கானி?</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>25.07.2026; தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி: விலை மீண்டும் உயர்வு…</title>
		<link>https://sathiyam.tv/25-07-2026-shock-for-gold-buyers-prices-rise-again/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Jul 2026 05:05:59 +0000</pubDate>
				<category><![CDATA[Digital Special]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658222</guid>

					<description><![CDATA[<p>இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் போர் பதற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 17-ஆம் தேதி வரை குறைந்து வந்த தங்கம், 18-ஆம் தேதி முதல் உயரத் தொடங்கி, 22-ஆம் தேதி சவரனுக்கு ரூ.1,680 வரை அதிகரித்தது. மேலும் உயருமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.270 மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/25-07-2026-shock-for-gold-buyers-prices-rise-again/">25.07.2026; தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி: விலை மீண்டும் உயர்வு…</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் போர் பதற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.</p>



<p class="wp-block-paragraph">கடந்த 17-ஆம் தேதி வரை குறைந்து வந்த தங்கம், 18-ஆம் தேதி முதல் உயரத் தொடங்கி, 22-ஆம் தேதி சவரனுக்கு ரூ.1,680 வரை அதிகரித்தது.</p>



<p class="wp-block-paragraph">மேலும் உயருமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.270 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.2,160 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,230க்கும், ஒரு சவரன் ரூ.1,05,840க்கும் விற்பனையானது.</p>



<p class="wp-block-paragraph">இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.13,300க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,06,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240க்கும், பார் வெள்ளி ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை மாற்றம் நகை வாங்கத் திட்டமிடுவோரிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/25-07-2026-shock-for-gold-buyers-prices-rise-again/">25.07.2026; தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி: விலை மீண்டும் உயர்வு…</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இனி விமானத்திலும் ஜாலியா UPI பயன்படுத்தலாம்…</title>
		<link>https://sathiyam.tv/now-you-can-conveniently-use-upi-on-flights-too/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 09:40:00 +0000</pubDate>
				<category><![CDATA[Digital Special]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658218</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் யூபிஐ (UPI) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், இணைய வசதி இல்லாத இடங்களில் யூபிஐ மூலம் பணம் செலுத்த முடியாதது பயனர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. குறிப்பாக மெட்ரோ ரயில் நிலையங்களின் நிலத்தடி பகுதிகள், விமானப் பயணங்கள், தொலைதூர கிராமங்கள், மலைப்பகுதிகள் மற்றும் இணைய இணைப்பு குறைவாக உள்ள பகுதிகளில் இந்த பிரச்சினை அதிகமாக காணப்படுகிறது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) புதிய ஆஃப்லைன் டிஜிட்டல் [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/now-you-can-conveniently-use-upi-on-flights-too/">இனி விமானத்திலும் ஜாலியா UPI பயன்படுத்தலாம்…</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் யூபிஐ (UPI) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், இணைய வசதி இல்லாத இடங்களில் யூபிஐ மூலம் பணம் செலுத்த முடியாதது பயனர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது.</p>



<p class="wp-block-paragraph">குறிப்பாக மெட்ரோ ரயில் நிலையங்களின் நிலத்தடி பகுதிகள், விமானப் பயணங்கள், தொலைதூர கிராமங்கள், மலைப்பகுதிகள் மற்றும் இணைய இணைப்பு குறைவாக உள்ள பகுதிகளில் இந்த பிரச்சினை அதிகமாக காணப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) புதிய ஆஃப்லைன் டிஜிட்டல் கட்டண வசதியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.</p>



<p class="wp-block-paragraph">இதன்படி, முன்னணி நிறுவனங்களின் PoS (Point of Sale) இயந்திரங்களில் NFC (Near Field Communication) தொழில்நுட்பம் மூலம் இணையம் இல்லாமலேயே ரூ.2,000 வரை பணம் செலுத்தும் வசதி வழங்கப்பட உள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்த சேவையை பயன்படுத்த, பயனர்கள் முதலில் தங்களது டிஜிட்டல் வாலெட்டில் பணத்தை முன்கூட்டியே ஏற்ற வேண்டும். அதன் பிறகு, மொபைலில் உள்ள NFC வசதியை பயன்படுத்தி PoS இயந்திரத்தில் இணைய இணைப்பு இல்லாமலேயே கட்டணம் செலுத்த முடியும்.</p>



<p class="wp-block-paragraph">தற்போது PoS இயந்திரங்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் யூபிஐ மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் நிலையில், புதிய வசதி டிஜிட்டல் கட்டணத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">ரூ.2,000 வரை மட்டுமே பரிவர்த்தனைக்கு அனுமதி வழங்கப்படுவதால், மோசடி மற்றும் நிதி திருட்டு அபாயமும் குறையும். இதற்காக PoS சேவை வழங்கும் நிறுவனங்கள் புதிய செயலிகளை உருவாக்க வேண்டும்.</p>



<p class="wp-block-paragraph">இந்த புதிய வசதி, 2023-ல் அறிமுகமான UPI Lite X ஆஃப்லைன் சேவையின் அடுத்த கட்டமாகும். 2024-ல் NFC மூலம் இரு நபர்களுக்கிடையேயான ஆஃப்லைன் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையேயான PoS அடிப்படையிலான ஆஃப்லைன் கட்டண முறையை NPCI விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது.</p>
<p>The post <a href="https://sathiyam.tv/now-you-can-conveniently-use-upi-on-flights-too/">இனி விமானத்திலும் ஜாலியா UPI பயன்படுத்தலாம்…</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டைனோசர்களை அழித்த அந்த &#8216;ராட்சத&#8217; விண்கல் எது?உலகையே நடுங்க வைத்த &#8216;விஞ்ஞானிகள்&#8217; !</title>
		<link>https://sathiyam.tv/which-giant-asteroid-wiped-out-the-dinosaurs-the-scientists-who-shook-the-world/</link>
		
		<dc:creator><![CDATA[Sathiyam tv]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 08:45:00 +0000</pubDate>
				<category><![CDATA[Digital Special]]></category>
		<guid isPermaLink="false">https://sathiyam.tv/?p=658211</guid>

					<description><![CDATA[<p>சுமார் 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பூமியை அசைக்க முடியாத சக்தியாக ஆட்சி செய்து கொண்டிருந்த டைனோசர்கள், ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக எப்படி அழிந்தன என்பது இன்றும் பலரை வியப்பில் ஆழ்த்தும் ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது. மெக்சிகோவின் யுகடான் தீபகற்பத்தில் விழுந்த ஒரு ராட்சத விண்கல் தான் இதற்குக் காரணம் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அந்த விண்கல் எந்த வகையைச் சேர்ந்தது? அது எங்கிருந்து வந்தது? என்ற கேள்விக்கு இப்போது [&#8230;]</p>
<p>The post <a href="https://sathiyam.tv/which-giant-asteroid-wiped-out-the-dinosaurs-the-scientists-who-shook-the-world/">டைனோசர்களை அழித்த அந்த &#8216;ராட்சத&#8217; விண்கல் எது?உலகையே நடுங்க வைத்த &#8216;விஞ்ஞானிகள்&#8217; !</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">சுமார் 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பூமியை அசைக்க முடியாத சக்தியாக ஆட்சி செய்து கொண்டிருந்த டைனோசர்கள், ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக எப்படி அழிந்தன என்பது இன்றும் பலரை வியப்பில் ஆழ்த்தும் ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது.</p>



<p class="wp-block-paragraph">மெக்சிகோவின் யுகடான் தீபகற்பத்தில் விழுந்த ஒரு ராட்சத விண்கல் தான் இதற்குக் காரணம் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அந்த விண்கல் எந்த வகையைச் சேர்ந்தது? அது எங்கிருந்து வந்தது? என்ற கேள்விக்கு இப்போது சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒரு மிகத்தெளிவான பதிலைக் கண்டுபிடித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">&#8216;சயின்ஸ் அட்வான்ஸ்&#8217; (Science Advances) இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, டைனோசர்களின் அழிவுக்குக் காரணமான அந்தப் பாறை, சூரிய குடும்பத்திலேயே மிகவும் அரிய வகை விண்கல்லான &#8216;கார்பனேசியஸ் CO சாண்ட்ரைட்&#8217; (Carbonaceous CO Chondrite) என்று உறுதி செய்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">சுமார் 10 கிலோமீட்டர் அகலமுள்ள இந்த மாபெரும் விண்கல் பூமியில் மோதியபோது ஏற்பட்ட தாக்கம், கற்பனை செய்ய முடியாத அளவிற்குப் பயங்கரமானது. அது மோதிய வேகத்தில் உருவான நிலநடுக்கங்கள், சுனாமிகள் மற்றும் காட்டுத்தீ ஆகியவை பூமியின் ஒரு பகுதியைச் சிதைத்தன.</p>



<p class="wp-block-paragraph">ஆனால், 75 சதவீத உயிரினங்களை அழித்த மிக முக்கியமான காரணி, அந்த மோதலால் வளிமண்டலத்தில் பரவிய ராட்சதப் தூசி மண்டலம்தான். இந்தப் புதிய ஆய்வின்படி, இந்த விண்கல்லில் சல்பர் எனப்படும் கந்தகத்தின் அளவு மிகவும் குறைவாகவே இருந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இதனால், டைனோசர்களின் அழிவுக்குச் சல்பர் வாயுவை விட, சூரிய ஒளியை மறைக்கும் அளவிற்குப் பரவிய அந்தப் பெரும் தூசியே மிக முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.</p>



<p class="wp-block-paragraph">இந்த அரிய வகை விண்கல் எங்கிருந்து வந்தது தெரியுமா? நமது சூரிய குடும்பத்தின் வெளிப்புறப் பகுதியில், அதாவது வியாழன் கிரகத்திற்கு அருகில் உள்ள குறுங்கோள் பட்டையிலிருந்து இது கிளம்பி வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p>



<p class="wp-block-paragraph">பூமியில் கண்டறியப்படும் விண்கற்களில் வெறும் 5 சதவீதம் மட்டுமே இந்த &#8216;CO சாண்ட்ரைட்&#8217; வகையைச் சேர்ந்தவை. அப்படியென்றால், கோடிக்கணக்கான விண்கற்களில் ஒன்றான இந்த மிக அரிய மற்றும் பழமையான பாறை, சரியாகப் பூமியைத் தாக்கி ஒரு மாபெரும் சகாப்தத்தையே முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது என்பதுதான் வியப்பான விஷயம்.</p>



<p class="wp-block-paragraph">பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் நகரங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பூமியின் களிமண் அடுக்குகளில் படிந்துள்ள நிக்கல் ஐசோடோப்புகளைத் தீவிரமாக ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">இந்த விண்கல் தாக்குதலால் ஏற்பட்ட தட்பவெப்ப மாற்றங்கள் பல ஆண்டுகளுக்கு நீடித்ததால், டைனோசர்களால் தப்பிப் பிழைக்க முடியாமல் போனது. 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த ஒரு விபத்துதான், இன்று மனிதர்களாகிய நாம் இந்த உலகில் வாழ்வதற்கு வழிவகுத்துள்ளது. இயற்கையின் இந்த விசித்திரமான மற்றும் பிரம்மாண்டமான நிகழ்வு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?</p>
<p>The post <a href="https://sathiyam.tv/which-giant-asteroid-wiped-out-the-dinosaurs-the-scientists-who-shook-the-world/">டைனோசர்களை அழித்த அந்த &#8216;ராட்சத&#8217; விண்கல் எது?உலகையே நடுங்க வைத்த &#8216;விஞ்ஞானிகள்&#8217; !</a> appeared first on <a href="https://sathiyam.tv">Sathiyam TV</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
