மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து… தமிழிசை என்ன சொல்றாங்கனு பாருங்க…!

138
Advertisement

மத்திய அரசின் கல்வி நிறுவனமான புதுச்சேரியில் ஜிப்மரில் ரோபாட் துணையுடன் 1,300 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.

இதையடுத்து ஜிப்மருக்கு சென்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை, அறுவை சிகிச்சை சிசிக்சை செய்து 20-க்கும் மேற்பட்ட பல்வேறு துறை மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ரோபா துணையுடன் அறுவை சிகிச்சை முதலில் வெளிநாடுகளில் செய்யப்பட்டது. தென்னிந்தியாவில் அதிகளவு ரோபாட் மூலம் அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையாக் ஜிப்மர் உள்ளது. சரியாக என்ன செய்ய வேண்டும், தவறில்லாமல் நேரடியாக அறுவை சிகிச்சை செய்யலாம். உயரிய சிகிச்சை செய்தாலும் தேடி வரும் மக்கள் மகிழ்வுடன், திருப்தியுடன் இருக்கும் வகையில் ஜிப்மர் நிர்வாக நடவடிக்கை இருப்பது அவசியம். இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்தில் தமிழ் கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று முதல்வர் தெரிவித்தார். அப்போது, நம் மொழி எப்போதும் மேம்பட்டு இருக்கவேண்டும் என்பதுதான் எண்ணம். தமிழுக்கு முக்கிய முக்கியத்துவம் தந்துவிட்டுதான் பாடத்திட்ட மாற்றத்துக்கு ஒத்துக்கொண்டோம்.

மத்திய அரசிடம் இதை தெரிவித்துள்ளோம். தமிழ் எப்போதும் சிபிஎஸ்இயில் இருக்கும். சிபிஎஸ்இ கூடாது என்பதை ஒத்துக்கொள்ள மாட்டேன். தமிழகத்தில் தமிழ் எவ்வளவு பேர் தேர்ச்சி பெறாமல் உள்ளதையும் பார்க்க வேண்டும். கல்வியில் மக்கள் மேம்பட வேண்டும். புதுச்சேரி கல்வி புரட்சியை பார்க்க உள்ளது. உலக அரங்கில் சிறந்த கல்வியை பெற்று மிகப்பெரிய பலனை குழந்தைகள் பெறுகிறார்கள்.