“ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்”

352

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு முகாம் மூலம் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாம் மூலம் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் சிவி கணேசன் வழங்கினார்.

பின்னர் பேட்டி அளித்த அவர், ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என உறுதி அளித்தார்.