ஓசூரில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி MLA தலைமையில் நடந்தது

414
Advertisement

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஓசூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலுங்கு வைத்து சீர் வரிசை பொருட்களான மஞ்சள், குங்குமம், புடவை, வளையல், வெற்றிலை-பாக்கு, பழம், பூ உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. அதோடு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், தேங்காய் சாதம் மற்றும் தயிர் சாதம் உள்ளிட்ட 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது. அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் உடல் எடை மற்றும் ரத்த அழுத்தம் சரிபார்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.