உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு விருதுகள்

414

முப்படைகளின் தளபதியான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று பாதுகாப்பு விருதுகளை வழங்கினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கீர்த்தி சக்ரா மற்றும் சௌரிய சக்ரா விருதுகளை அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கினார்.

இதில், அளப்பரிய வீரம், அசாத்திய துணிச்சல், மற்றும் கடமையில் அதீத ஈடுபாடு ஆகியவற்றை வெளிப்படுத்தியதற்காக, பாதுகாப்பு படையினருக்கான வீரதீர விருதுகளும் வழங்கப்பட்டன.

சிறப்பான சேவைக்காக 13 பரம் விசிஷ்டா சேவா பதக்கங்களையும், 29 அதி விசிஷ்டா சேவா பதக்கங்களையும் குடியரசுத் தலைவர் வழங்கினார்.

இந்திய கடற்படை துணைத் தலைமை வைஸ் அட்மிரல் சதீஷ்குமார், பரம் விசிஷ்டா சேவா பதக்கத்தை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.