ஆப்பிரிக்காவில் இருந்து தெலங்கானாவிற்கு கடத்தவரப்பட்ட ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்…

92
Advertisement

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு ஆப்பிரிக்காவில் இருந்து போதை பொருட்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசார், விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் மலாவியில் இருந்து தோஹா வழியாக ஹெராயினை கடத்திவந்தது தெரியவந்தது. இதனையடுத்து 41.3 கோடி ரூபாய் மதிப்புள்ள 5.90 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்தனர்.