Thursday, April 25, 2024
Home Authors Posts by sathiyamweb

sathiyamweb

2844 POSTS 0 COMMENTS

ராணுவ வீரர்களின் ஃபிட்னஸ்… அதிர்ச்சி ஆன பாதுகாப்புத்துறை… பறந்த ‘சீக்ரெட்’ உத்தரவு…

0
ராணுவ வீரர்கள் என்றாலே ஹைட் அண்ட் வெயிட்டான அவர்களின் கம்பீரமான உடல்தோற்றம்தான் முதலில் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியெல்லாம் செய்து உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பார்கள்.  அப்படின்னு…. நாம நம்பிக்கிட்டிருந்தோம். ஆனா, அந்த நம்பிக்கையில கொஞ்சம் கீறல் விழுந்திருக்குன்னு சொல்லலாம். அதாவது, சமீப காலமாக ராணுவ வீரர்களின் உடல் தரம் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் பாதுகாப்புத்துறைக்கு கிடைச்சிருக்கு. இதனால, ராணுவ வீரர்களின்  உடல்தகுதி மற்றும் வாழ்க்கை முறை,  நோய்களோட அதிகரிப்புன்னு கருத்தில் கொண்டு, புதிய உடற்பயிற்சி கொள்கையை இந்திய ராணுவம் கொண்டு வந்திருக்காம். இந்த புதிய உடற்பயிற்சி கொள்கை தொடர்பாக அனைத்து படைப்பிரிவினருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாம். மேலும், ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு உடல் தகுதி மதிப்பீட்டு அட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கொள்கையில் தற்போதுள்ள சோதனைகளுடன் கூடுதலாக மேலும் சில பரிசோதனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ராணுவத்தில் உள்ள  வெவ்வேறு வயதினருக்கான உடல் தர நிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன....

நெருங்கும் தேர்தல்…அரசியல் கட்சிகளுக்கு பணம் வருவது எப்படி?

0
2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிட்டே வர்ற சூழல்ல, ஆட்சியை புடிக்க பிரதான தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக பலக்கட்ட வியூகங்களை வகுத்து விறுவிறுப்பா செயல்பட்டு வராங்க. அது இருக்கட்டும், தேர்தலை சமாளிக்க...

அடிக்கடி செவ்வாழை சாப்பிடுறீங்களா? கிட்னியை சட்னி ஆக்கிவிடும் செவ்வாழை? அதிர்ச்சி தகவல்கள்

0
செவ்வாழை சாப்பிட்டால் உடை எடை அதிகரிக்குமா? ஒருநாளைக்கு எத்தனை  செவ்வாழை சாப்பிடலாம்? கலோரிகள் அடிப்படையில் மட்டுமே உடல் எடை கூடுமா? கிட்னி நோயாளிக்கு செவ்வாழை ஆபத்தா?  வாழைப்பழங்கள்ல ரஸ்தாளி, கற்பூரவல்லி, நேந்திரம், பச்சை வாழைப்பழம் மற்றும் செவ்வாழைன்னு எத்தனையோ வகைகள் இருக்கு. இதுல ஒவ்வொரு வகை...

வாழை நார், கற்றாழையில் புத்துணர்ச்சியூட்டும் புது சேலைகள்..

0
தமிழகத்தின் காஞ்சிபுரம், கோவை மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கைத்தறி சேலைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது பல்வேறு காரணங்களால் கைத்தறி நெசவாளர்கள் வேலை...

ராஜா ராணி குளம் மண்ணுக்குள் மறைந்த மர்மம்…

0
ராணிகள் மட்டுமே குளிக்க வெட்டப்பட்ட குளம்... இயற்கை அழகை ரசிக்க உருவாக்கப்பட்ட தோட்டம்... விஜயநகர கட்டுமான பணியில் உருவாக்கப்பட்ட பேரழகு... ராஜா ராணி குளம் மண்ணுக்குள் மறைந்த மர்மம்... சேலம் கோரிமேடு அருகே உள்ள நகரமலை அடிவாரம் பின்புறம் பகுதியில்...

ஆணியே புடுங்காத  SC, ST ஆணையம்… என்ன செய்கிறார் ஸ்டாலின்?

0
மக்களின் வரிப்பணத்தில் தமிழ்நாடு அரசால் பலகோடிகளை செலவழித்து ஆரம்பிக்கப்பட்ட ஆணையம்தான் தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம். ஆனால், தமிழ்நாடிலுள்ள பட்டியலின மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சென்னை...

ஒரு மாதத்தில் கட்சி அறிவிக்கப்போகும் விஜய்? டெல்லியில் ஸ்பெஷல் டீம் முகாம்

0
ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமா 2009ஆம் ஆண்டு மாறுனப்பவே விஜய் அரசியலுக்கு வரப்போறாருன்னு பரவலானபேச்சு அடிபட்டுச்சு. அவரது படங்கள் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி நடக்குற ஆடியோ லான்ச்ல பேசுற அரசல் புரசலான...

Time Bomb பத்தி கேள்விப்பட்டிருக்கிங்களா?

0
Time Bomb பத்தி எல்லாருமே கேள்விப்பட்டிருப்போம். At least சினிமாவுலயாவது கண்டிப்பா பாத்திருப்போம். அதுல குறிக்கப்பட்ட நேரம் குறைஞ்சுட்டே வந்து 0 எண்ணை, கருவி அடையும் போது வெடிச்சுடும். அதே மாதிரி நம்ம...

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் யார்? இப்ப என்ன செய்கிறார்கள் தெரியுமா?

0
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. யார் அந்த ஐந்து நீதிபதிகள், அவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. ராமர் கோயிலானது சட்டப்படி கட்டப்பட்டுள்ளதாக பேசிய பிரதமர் மோடி, அயோத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் விவாதப்பொருளானது. அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட ஐந்து நீதிபதிகளுக்கும் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதும் பேசுபொருளாக மாறியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என 2019ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கிய அந்த நீதிபதிகள் அமர்வில் பங்குபெற்றிருந்த நான்கு நீதிபதிகள் ஓய்வு பெற்று வெவ்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து வருகின்றனர். தீர்ப்பு வழங்கிய சமயத்தில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் ரஞ்சன் கோகோய். ஓய்வு பெற்ற பிறகு அவர் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார். மற்றுமொரு நீதிபதியான ஷரத் அரவிந்த் போப்டே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகி, 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு மகாராஷ்டிரா தேசிய சட்டப் பல்கலைக்கழக வேந்தராக பதவி வகித்து வருகிறார். அதே போல, 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அசோக் பூஷன், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி தீர்ப்பு அமர்வில் அரசியல் சாசனப்படி இடம்பெற்றிருந்த அப்துல் நசீர், ஆந்திர பிரதேச ஆளுநராக இருக்கும் நிலையில், அதேபோல அமர்வில் ஒரு அங்கமாக இருந்த சந்திரசூட் தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். இந்தியாவின் ஐம்பதாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட் வரும் நவம்பர் மாதம் வரையில் அந்தப் பணியில் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் அலட்சியம்… இளம்பெண் விபரீத முடிவு

0
மருத்துவமனையில் உயிருக்குப்போராடியபடி ஒரு பெண் பேசிய வீடியோ வாக்குமூலம் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ''தனது கணவரின் நண்பர் ஒருவருக்கு தனியார் பைனான்ஸ் மூலமாக கடன் வாங்கி கொடுத்ததாகவும், கடன் வாங்கிய அந்த...

Recent News