sathiyamweb
உங்களுக்கு 2 கிட்னியும் இருக்கா? செக் பண்ணிக்கோங்க..இல்லன்னா உயிருக்கே ஆபத்து!
நம்ம உடலோட கட்டமைப்பு ரொம்பவே ஆச்சர்யமானது. பல விதமான வேலைகளை செய்யும் உறுப்புகள் அதுக்கேத்த மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கு. அதுல கண்கள், காதுகள், நுரையீரல்கள் மாதிரி இரண்டு சிறுநீரகங்கள் இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். ஒரு...
வேலை வாங்கித் தருவதாக காவல்துறை உதவி ஆய்வாளர்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவரிடம் காவல்நிலையத்தில் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்புக்குள்ளாகியது. அந்த வீடியோவில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர், காவல்துறையில்...
1997 – 2012 க்குள் பிறந்தவரா நீங்கள்? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
வழக்கமாக நைண்டிஸ் கிட்ஸை கலாய்த்து மீம்ஸ் போடுவது மட்டுமே பெரும்பாலான டூ கே கிட்களின் ஃபுல் டைம் ஜாப் ஆக இருக்கும். அதுவும், நைண்டிஸ் கிட் என்றாலே திருமணமாகாமல் பெண் தேடி கொண்டிருப்பதைப்போல்...
அடிக்கடி தசைப்பிடிப்பு வருதா? இதை சாப்பிடுங்க போதும்
இப்பல்லாம் வேலைக்கு போற பெரும்பாலான மக்கள் face பண்ற முக்கிய பிரச்சினை தசைப்பிடிப்பு தான். காரணம், ஓடியாடி வேலை செய்றதை விட computer முன்னாடி உக்காந்து வேலை பாக்குறவங்க தான் அதிகம். ஒரே positionல ரொம்ப நேரம் உக்காந்து இருக்குறது, வேலைப்பளு இப்படி பல காரணங்கள்னால தசைப்பிடிப்பு ஏற்படும்.
அப்ப வீட்ல வேலை செய்றவங்களுக்கு, அல்லது விளையாட்டு வீரர்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படாதுன்னுலாம் அர்த்தம் இல்ல. அதாவது தசைகள் ரொம்ப நேரம் செயல்படல அப்படின்னாலும் பாதிக்கப்படும், அதிகமா செயல்பட்டுட்டே இருந்தாலும் பாதிக்கப்படும்.
உடற்பயிற்சி, சரியான வழிமுறைகளை பின்பற்றுவது, இதையெல்லாம் தாண்டி சில உணவுப் பழக்க வழக்கங்களை மாத்துனாலே சிறந்த பலன்கள் கிடைக்கும் அப்படின்னா நம்ப முடியுதா? தசைப்பிடிப்பு பாதிப்புகளை சரி செய்யும் உணவு பழக்கங்களை பத்தி தான் இந்த செய்தி தொகுப்புல தெரிஞ்சுக்க போறோம்.
B Complex vitamin குறைபாடு இருக்கும்போது தசைப்பிடிப்பு அதிகமா ஏற்படும். பால் மற்றும் பால் பொருட்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசி, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி ரகங்கள் ஆகிய உணவு வகைகள்ல B Complex அதிகமா இருக்கும். தசைப்பிடிப்புகளை தவிர்க்க உடலின் நீர்ச்சத்தை பராமரிக்குறது ரொம்பவே முக்கியம்.
வியர்வை வழியா உடல்ல இருக்க நீர் வெளியேறும்போது உப்பு சத்துக்களும் வெளியேறிடும். வெயில் காலம் நெருங்கி வர சூழல்ல உப்பு சக்கரை சேர்த்த lemon ஜூஸ், இளநீர் எடுத்துக்குறதும் வாழைப்பழம் சாப்பிடுறதும் இந்த பிரச்சினையை சமாளிக்க ரொம்பவே உதவியா அமையும்.
வாழைப்பழத்துல பொட்டாசியம், மக்னீசியம், Vitamin B6 அதிகம் இருக்குறதால விளையாட்டின் போது ஏற்படுற திடீர் தசைபிடிப்பு சரியாக உதவியா அமையும். அதுனாலயே, தசைப்பிடிப்பு பிரச்சினை இருக்குறவங்க தினசரி ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுறது பழக்கமாக்கிகுறது நல்லது. இன்னுமே நிறைய பேர் கவனிக்காம இருக்க விஷயம் மக்னீசியம் குறைபாடு.
இந்த மக்னீசியம் குறைபாட்டினால தசைபிடிப்பு ரொம்பவே எளிதா வரலாம். கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை மாதிரியான சிறுதானியங்கள், பூசணி விதைகள், கொண்டைக்கடலை, பல்வேறு வகையான பருப்பு வகைகள் - இதெல்லாம் அப்பப்ப சாப்பிட்டுட்டு வந்தாலே மக்னீசியம் அளவுகள் சீரா பராமரிக்கப்படும்.
பச்சை காய்கறிகள், இறைச்சி, மீன், முட்டை, பயறுகள் இடம்பெறுற மாதிரியான சரிவிகித உணவு முறையை follow பண்றதோட, சீரான உடற்பயிற்சி மற்றும் முறையான தூக்கம் ஆகிய விஷயங்கள்ல கவனம் செலுத்துனாலே அடிக்கடி ஏற்படும் தசைபிடிப்பு பாதிப்புகள்ல இருந்து விடுபடலாம் என்பதே மருத்துவர்களின் பரிந்துரையா இருக்கு.
திருப்பூரில் குண்டும் குழியுமான சாலை பொதுமக்கள் படும் அவதி…
திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட 28 வது வார்டு, மகாலட்சுமி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டதில்...
அரசு பேருந்துல பயணிச்சா 10,000 ரூபாய்…அடிக்கப்போகும் JACKPOT…
பேருந்து போக்குவரத்து சங்கங்கள் வேலை நிறுத்தம், பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம், கிளம்பாக்கம் கோயம்பேடு பாஸ் ஸ்டாண்டு பஞ்சாயத்துன்னு எல்லாம் ஓரளவுக்கு settle ஆகி, பேருந்து போக்குவரத்து சற்றே இயல்பு நிலைக்கு திரும்பி இருக்குன்னு தான் சொல்லணும். பண்டிகை காலங்கள், வார விடுமுறை நாட்கள் போன்ற தருணங்கள்ல தான் அரசு பேருந்துகள்ல முன்பதிவு செய்து பயணிக்குறவங்களோட எண்ணிக்கை அதிகமா இருக்கும்.
சாதாரண வார நாட்களின் போதும் அரசு பேருந்துகள்ல முன்பதிவு செஞ்சு பயணிக்குறவங்களோட எண்ணிக்கையை அதிகரிக்க, தமிழக போக்குவரத்து துறை ஒரு அட்டகாசமான முன்னெடுப்பை கையில் எடுத்து இருக்கு. நடப்பு ஆண்டு முதல் சாதாரண நாட்கள்ல ஆன்லைன்ல புக் பண்ணி பயணிக்குற பயணிகள்ல இருந்து, மாதத்திற்கு மூணு பேரை குலுக்கல் முறையில தேர்ந்தெடுத்து அவங்களுக்கு 10,000 ரூபாய் பரிசா வழங்கப்படும் அப்படின்ற அறிவிப்பு வெளியாச்சு.
அந்த வகையில ஜனவரி மாதத்துக்கான மூன்று வெற்றியாளர்களை போக்குவரத்து துறை அமைச்சர் பிப்ரவரி 1 ஆம் தேதி அன்னைக்கு தேர்வு செஞ்சு இருக்காரு. எஸ்.இசக்கி முருகேசன், கே.சீதா, இம்டியாஸ் ஆரிப் ஆகிய மூணு பேருக்கும் தலா 10,000 ரூபாய் வழங்கப்படும் அப்படின்னு அறிவிக்கப்பட்டிருக்கு. இவர்களுக்கு சீக்கிரமா இந்த பணம் அளிக்கப்படும்னு சொல்லப்பட்டிருக்க நேரத்துல, போக்குவரத்து துறையோட இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிஞ்சுட்டு வருது.
கட்சி அறிவிச்சாரு ஓகே..பெயரையும் மாத்திட்டாரே விஜய்! இந்த ட்விஸ்ட்டை கவனிச்சீங்களா?
இப்ப அப்பன்னு கடைசியில ஒரு வழியா விஜய் நேரடியா அரசியல் களத்துல இறங்கிட்டாரு. நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிடுவாரா? கட்சி பேர் என்ன? அப்படின்ற எல்லா கேள்விகளுக்கும் பதிலா அமைஞ்சுருக்கு விஜய் வெளியிட்டு இருக்க...
TNPSC எழுத தயாராகும் தேர்வர்கள் கவனத்திற்கு!!
பொதுவாக நம்மில் பெரும்பாலானோருக்கு அரசு வேலை வாங்க வேண்டுமென்ற கனவு இருக்கும் இருக்கும். அதற்காக அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுகளின் மீது விழிவைத்து காத்திருப்போம். மேலும் அரசு பணிகளுக்கான தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வர். அவ்வாறு நடத்தப்படும்...
செக்யூரிட்டி டூ வெஸ்ட் இண்டீஸின் ஹீரோ… யார் இந்த ஷமர் ஜோசப்?
27 வருடங்கள்ல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியால் தடம் பதிச்சிருக்கு வெஸ்ட் இண்டீஸ் டீம். இதுல, ஒட்டுமொத்த கவனமும் ஷமர் ஜோசப் மேல தான் திரும்பியிருக்கு. காரணம், அவர் பண்ண தரமான சம்பவம் தான். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸ்ல ஒன்னு...
நிறம் மாறும் நிதிஷ் குமாருக்கு இப்படியொரு ‘அலர்ஜி’!
10 ஆண்டுகள்ல அஞ்சு முறை கூட்டணி மாற்றம், 9 முறை CM பதவின்னு பிசியான அரசியல்வாதியா இருக்குற நிதிஷ் குமார், 35 ஆண்டுகளா MLA மட்டும் ஆகல. அதெப்படிப்பா MLA ஆகாம CM ஆக முடியும்னு தானே கேக்குறீங்க? அதைப் பத்திதான் இந்த செய்தி தொகுப்புல தெரிஞ்சுக்க போறோம். 2020ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை பாஜக கூட சேர்ந்து நிதிஷ் குமாரோட JDU எதிர்கொண்டுச்சு.
122 தொகுதிகள்ல வெற்றி பெற்றா ஆட்சியை புடிக்கலாம் அப்படின்ற நிலையில, பாஜக 74 தொகுதிகள்லயும் JDU 43 தொகுதிகள்லையும் வெற்றி பெற்று, நிதிஷ் குமார் CM ஆனாரு. அதை தொடர்ந்து, 2022ஆம் ஆண்டுல பாஜகவை விட்டு வெளியேறின நிதிஷ் RJD மற்றும் காங்கிரஸ் கூட கூட்டணி வச்சு மறுபடியும் CM பதவியை புடிச்சாரு. இப்ப இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, பாஜக ஆதரவு MLAக்களோட மீண்டும் ஒரு முறை CM ஆகி இருக்காரு.
இப்படி கிடைக்குற chanceல லாம் புகுந்து விளையாடுற நிதிஷ் குமாருக்கு MLA பதவின்னா மட்டும் கொஞ்சம் அலர்ஜிங்க. காரணம், அது மக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வேண்டிய பதவி. இப்படி மூச்சுக்கு முன்னூறு முறை கூட்டணியை மாத்துனா மக்களை நம்பி தொகுதிகளை எப்படி வெற்றி பெற முடியும்? 2005ஆம் ஆண்டுல இருந்து தற்போது வரைக்கும் பீகார் முதல்வரா நிதிஷ் குமார் இருந்துட்டு வராரு. அதுக்கு முக்கியமான காரணம், அங்க இருக்க சட்ட மேலவை தான்.
தமிழ்நாட்டுல முன்னொரு காலத்துல சட்ட மேலவை இருந்தாலும், இப்ப நடைமுறைல இல்ல. ஆனா கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள்ல சட்டசபை மட்டுமில்லாம சட்ட மேலவையும் செயல்பட்டு வருது. சட்ட மேலவை உறுப்பினர் பதவி வகிக்க MLAக்களோட ஆதரவு இருந்தா போதும். அந்தவகையில் தான் நிதிஷ் குமார் சட்ட மேலவை உறுப்பினரா இருந்து முதலமைச்சர் பதவியை தக்க வச்சுட்டு வராரு. 1977ஆம் ஆண்டு ஹரனாட் சட்டசபை தொகுதியில நின்னு தோல்வியடைஞ்ச பிறகு, 1985ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்ல போட்டியிட்டு முதல் முறையா மட்டுமில்ல கடைசி முறையாவும் MLA ஆனாரு நிதிஷ் குமார்.
அதுக்கப்புறம் 35 ஆண்டுகளா MLAவா போட்டியிடாமலே முதல்வர் பதவியை கைவசம் வச்சுருக்கறது, நிதிஷ் குமாரோட ராஜதந்திரமா பாக்கப்பட்டாலுமே தோல்விக்கு பயந்து, MLAகளை மட்டுமே அரசியல் சதுரங்கத்துல காய்நகர்த்தி பதவியை தக்க வைக்குறது ஒரு வகையான கோழைத்தனம் அப்படின்றதே அரசியல் விமர்சகர்களோட பரவலான கருத்தா இருக்கு.