“OPS திமுக-வின் பி-டீமாக செயல்பட்டு வருகிறார்”

241

கொடநாடு கொலை – கொள்ளை வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிசாமி சட்டரீதியாகவே செயல்பட்டார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவி்த்துள்ளார்.

ஓ.பி.எஸ். திமுக-வின் பி-டீமாக செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறு்பில் இருந்து விலகிய மருது அழகுராஜ் தெரிவி்த்த குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.

அப்போது, ஓ.பி.எஸ். உடன் கை கோர்த்துக்கொண்டு தவறான தகவல்களை மருது அழகுராஜ் கூறியுள்ளார் என்று அவர் மறுப்பு தெரிவி்த்தார்.

பொதுக்குழு உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில், மருது அழகுராஜ் குற்றம்சாட்டியுள்ளார் என்றும் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் இ.பி.எஸ். சட்டரீதியாகவே நடவடிக்கை எடுத்தார் என்றும் இளங்கோவனை விசாரிப்பதில் ஆட்சேபணை எதுவும் இல்லை என்றும் ஜெயக்குமார் பதில் அளித்தார்.