தந்தை கண் முன்னே மகள் உயிரிழப்பு

325

அரசுப் பேருந்து மோதி தந்தை கண் முன்னே 14 வயது மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்.

இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகள் கீர்த்தனா.

இந்நிலையில் குணசேகரன் அவருடைய 14 வயது மகள் கீர்த்தனா மற்றும் 11 வயது மகன் சுபீசன் ஆகிய மூவரும் அருகே உள்ள உறுவினர் வீட்டுற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் எதிர்பாராத விதமாக வந்த அரசு பஸ் இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்துகுள்ளானது.

விபத்தில்14 வயது மகள் தந்தை கண்முன்னே தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.