அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ரிச்சர்ட்சன் பகுதியில் பெர்க்னர் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளி அருகே மாணவன் ஒருவன் துப்பாக்கியுடன் செல்வதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படியில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சந்தேகிக்கும் வகையில் இருந்த மாணவனை பிடித்தனர்.
மேலும் மாணவனின் வாகனத்தில் ஏ.கே.47 ரக துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டதை அடித்து மாணவன் கைது செய்யப்பட்டான்.
உவால்டே நகரில் உள்ள தொடக்கப்பள்ளிக்குள் நேற்று துப்பாக்கியுடன் புகுந்த இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக பள்ளி குழந்தைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினான்.
இந்த கொடூர தாக்குதலில் 2 ஆசிரியர்கள், 19 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
விரைந்து வந்த போலீசார் மீதும் இளைஞர் தாக்குதல் நடத்தியதால், இளைஞரை போலீசார் சுட்டு கொன்றனர்.