கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் மாரடைப்பு ஆபத்து அதிகரித்துள்ளதாக  என தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் எச்சரித்துள்ளார்…

68
Advertisement

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், இதய நோய்கள் அதிகரிக்கிற ஆபத்து இருப்பதாக தெரிவிக்கின்றன என மருத்துவர் நரேஷ் புரோகித் எச்சரித்துள்ளார்.

சமீபத்திய உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சிகள், கொரோனாவால் ரத்தம் உறைவு ஏற்பட்டு ரத்த போக்கு அதிகரித்து மாரடைப்பு ஆபத்தை கூட்டுவதாக தெரிவித்தார். கொரோனா தொற்றுக்கு பின்னர் மாரடைப்பு மற்றும் இதயநோயால் ஏற்படும் மரணம் தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு சுகாதாரத்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  மக்களிடையே திடீர் மரணம் தொடர்பாகவும் குழு அமைத்து ஆராய வேண்டும் என்றும் நரேஷ் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.