குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் குட்கா: பறிமுதல் செய்த போலீசார்

206

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  3 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குன்றத்தூர் பகுதியில் தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஷாலினி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்த கண்டிகையை சேர்ந்த சிராஜுதீன், கூடுவாஞ்சேரியை சேர்ந்த மணிமாறன், ஆகிய இருவரை கைது செய்து விசாரித்த போது, பூந்தமல்லி அருகே உள்ள குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, குடோனை திறந்து பார்த்தபோது அதில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மூட்டை, முட்டையாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்து அவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடோன் உரிமையாளர் லோகநாதன் என்பவரையும் கைது செய்தனர்.