பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் பார்வைக் குறைபாடு இருக்கும்

226
Advertisement

கைகுழந்தை என்றால் அனைவருக்கும் பிடிக்கும், எனவே புதிதாக பிறந்த குழந்தையைப் பற்றி அறியப்படாத சில உண்மைகளை, இத் தொகுப்பில் பார்க்கலாம், புதிதாக பிறந்த குழந்தை சிசுவைக் மருத்துவ பெயரில் இன்பான்ட் என்று கூறப்படுகிறது.

தினமும் உலகில் பல லட்ச குழந்தைகள் பிறக்கின்றனர் அதில் ஒவ்வொரு 300 பிரசவங்களில் 1 பிரசவம், இரட்டை  பிறப்பு என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றனர்.

பிறந்த குழந்தைகளுக்கு சரியாக ஒரு மாதம் வரை கண்ணீர் வராது, மேலும்   புதிதாக பிறந்த குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்று   ஆணின் குரோமோசோம் தான் தீர்மானிக்கிறது,

இந்த பூமியில் ஆண்டுக்கு சராசரியாக 131.4 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றனர், அப்படி பார்த்தால் ஒரு நொடிக்கு 4 குழந்தைகள் வீதம் ஒரு நிமிடத்திற்கு 250 பிரசவங்களும் மற்றும் 1 மணி நேரத்திற்கு 15 ஆயிரம் குழந்தைகள் பிறக்கிறது.

குழந்தைகளின் அறிவுத்திறனில் 80% வரை தாயிடமே பெறப்படுகிறது.

புதிதாக பிறந்த குழந்தைக்கு பார்வைக்குறைபாடு இருக்கும்.அதாவது குழந்தை பிறந்து முதல் சில வாரங்களில் கருப்பு வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தை மட்டுமே பார்க்க முடியும். இவைகளே பிறந்த குழந்தையின் அறியப்படாத உண்மைகள் ஆகும்.