நின்று சாப்பிட்டால் இதயம் அதிகம் சிரமப்படும்

250
Advertisement

தற்போது இருக்கும் நவீன மற்றும் பரபரப்பான சூழலில் பலரும் காலை மற்றும் மாலை உணவுகளை அவசர அவசரமாக, நின்றுக் கொண்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளோம்.

ஆனால் நின்று கொண்டே சாப்பிடுவதால், மன அமுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் நாவின் சுவை அறும்புகளைப் பாதிப்படையும் , இது எப்படி நடக்கிறது?

பொதுவாக நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக இரத்தம் கீழ் நோக்கிப் பாயும், இதனால் நின்று கொண்டே சாப்பிடும் போது உடலின் கீழ் பகுதியிலிருந்து இரத்தம் மேல் நோக்கிச் செல்வதற்குச் சிரமப்படும், 

எனவே இரத்தத்தை மேல் நோக்கி அனுப்ப இதயம் சிரமப்படும், அதன் காரணமாக பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாட்டில் பாதிப்பு தன்மை ஏற்பட்டு மன அமுத்தத்தை தூண்டும் ஹார்மோனான கார்டிசால் அளவை அதிகரிக்கும். நின்று கொண்டே சாப்பிடுவது வழக்கமாக மாறினால் உணவின் சுவையை அறியக்கூடிய உணர்வு நரம்புகள் பாதிப்படையும்,  நாளடைவில் ருசியை அறியும் நாவின் சுவை அறும்புகளை பாதித்து ருசித்துச் சாப்பிட முடியாத நிலையை ஏற்படுத்தும், எனவே காளை மடக்கி சம்மணம் போட்டுச் சாப்பிடுவதே மிக நல்லதாகும், இது தொடர்பாக 350 நபர்களுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் அமர்ந்து சாப்பிடுபவர்களை விட நின்று சாப்பிடுபவர்களுக்கு உடல் உருப்புகளில் சீரற்ற தன்மை ஏற்பட்டது தெரியவந்தது.