காலையில் எழுந்தவுடன் டீ, காபிக்கு முன்னாடி  இதை  குடிங்க

265
Advertisement

நம்மில் பல பேருக்கு எழுந்தவுடன் காபி அல்லது டீ இரண்டில் ஏதேனும் ஒன்று  இல்லையென்றால்  அந்த நாளே நன்றாக போகாது  .  இதிலும் பலருக்கு நாளில் ஒரு முறையாவது டீ , காபி குடிக்கவில்லை என்றால்  தலையே வெடித்துவிடும். நம் நாட்டில் காலையில் எழுந்தவுடன் டீ , காபி குடிக்க வேண்டுமென்பது ஒரு எழுதப்படாத விதியாகிவிட்டது .

 தேநீர் மற்றும் காபி இரண்டிலும் டானின் என்ற வேதிப்பொருள் அதிகளவில் உள்ளதால் , அவை பற்களை வெண்மை நிறத்திலிருந்து மஞ்சள் படிந்த நிறத்திற்கு மாற்றுகிறது   .

தேநீர் மற்றும் காபி இரண்டும் இயற்கையாகவே  அதிக அமிலத்தன்மை கொண்டவை என்பதால்,  காலையில்  வெறும் வயிற்றில் டீ , காபியை உட்கொள்வதனால் உடலில்  நீரிழப்பு அதிகமாகி அல்சர் போன்ற  எதிர்பார்க்க முடியாத பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

காலையில் எழுந்தவுடன் முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால்   டீ , காபியால் நம் உடலுக்கு  ஏற்படும் பக்கவிளைவுகளை குறைப்பதற்கு வழிவகை செய்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள் .