கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இது தொடர்பாக குடியரசு மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது என்றும், அதன் பின் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இன்னொரு கண்ணில் கடந்த ஆகஸ்டு 19 ஆம் தேதி ராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.