எம் ஐ அணியில் காலியான தலைமை பயிற்சியாளர் பதவி

195
Advertisement

ஐ பி எல் கிரிக்கெட் அணிகளின் ஒன்றான மும்மை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் ஜாம்பவான் வீரரான மஹேலா ஜெயவர்த்தனே பணியாற்றி வந்தார், அதுபோலவே இந்திய அணியின் முன்னால் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர்கான் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆபரேட்டிங் இயக்குநராக இருந்தார், எனவே இருவரும் அப்பதவியிலிருந்து தற்போது மாற்றப்பட்டுள்ளனர். 

அதாவது தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு மும்பை இந்தியன்ஸ் மட்டுமின்றி, தென் ஆப்பிரிக்காவில் நடக்கவுள்ள 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான எம் ஐ கேப்டவுன் அணியும் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள பிரிமீயர் லீகில் எம் ஐ எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் சொந்தமாக உள்ளது.

உலக அளவில் இந்த மூன்று அணிகளையும் ஒருங்கிணைந்து அதற்குரிய உயர் செயல்பாட்டை தலைவராக ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார், மூன்று அணிகளும் வளர்ச்சியடைய  தேவையான பணிகளை இவர் மேற்கொள்வர், அதுபோலவே  ஜாகீர்கான் அவர்களுக்கும் பதவி உயர்வு கிடைத்துள்ளது. மொத்த அணிகளின் கிரிக்கெட் மேம்பாட்டு இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

எனவே மும்மை இந்தியன்ஸ் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர், விரைவில் நியமிக்கப்படுவார்கள் எனவே புதிய தலைமை பயிற்சியாளராக மும்மை இந்தியன்ஸ் அணிக்கு யார் வரவேண்டும் என்று கமெண்டில் சொல்லுங்கள்.