தமிழ்நாடு அரசில் “AI”.. ஜப்பானில் பிரம்மித்த முதலமைச்சர் ஸ்டாலின்! இவ்ளோ கண்டுபிடிப்பா? அதென்ன NEC?

128
Advertisement

ஜப்பான் சென்று உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் NEC பியூச்சர் கிரியேசன் கிளப்புகளுக்கு சென்று பார்வையிட்டு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிரமிப்படைந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு நிறுவனமான NEC Future Creation Hub-க்கு சென்று பார்வையிட்டார். அங்குள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

NEC Future Creation Hub மையமானது, சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வசதியாக, ஊடாடும் உரையாடல்கள் (Interactive dialogues) மற்றும் நேரடி அனுபவங்கள் மூலம் தொழில்நுட்பமும் வணிகமும் ஒன்றிணையும் இடமாகும். சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவது முதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பயோமெட்ரிக் அங்கீகார தொழில்நுட்பங்களின் வளர்ச்சி வரை புதிய மதிப்பை உருவாக்குகிறது.

NEC Future Creation மையத்திற்கு சென்று பார்வையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம், விமான நிலையங்களில் மின்னணு சுங்க அறிவிப்பு வாயில் மூலமாக முக அங்கீகார தொழில்நுட்பம், வேகமான சுங்க அனுமதி, நெரிசலற்ற சுங்க ஆய்வு தளங்கள், காத்திருப்பு நேரத்தை குறைத்தல் ஆகிய மனஅழுத்தம் இல்லாத விமான பயணத்தை மேற்கொள்வதற்கான நடைமுறை வழிமுறைகள் குறித்து மைய உயர் அலுவலர்கள் விளக்கினர்.